அரசியல் இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு : எதிரணி போர்க்கொடி!

  • February 6, 2026
  • 0 Comments

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை Emergency Law மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டார். அவசரகாலச் சட்டத்தை இந்த அரசாங்கம் ஒடுக்குமுறைக்காக பயன்படுத்துகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். எனவே, அச்சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி போராட்டம்!

  • January 31, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறுகோரி நாடு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துவது குறித்து எதிரணி ஆராய்ந்துவருகின்றது. சட்ட திருத்தம் ஊடாக பழைய முறையிலேயே தேர்தல் நடத்தும் சூழல் உள்ள நிலையில், அதனை இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிரணி குற்றஞ்சாட்டிவருகின்றது. இந்நிலையிலேயே தேர்தல்கோரி கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி, அக்கோரிக்கை தொடர்பில் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு எதிரணி திட்டமிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து எதிரணிகளும் இணைந்தே கூட்டு அரசியல் சமராக […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் ஆயுதமாகிறதா மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம்?

  • January 28, 2026
  • 0 Comments

” நாடாளுமன்றத்தில் தமக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்தி , அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது சட்டமா அதிபர் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ சட்டமா அதிபரை ஜனாதிபதியால் நீக்க முடியாது. அது தொடர்பான பொறுப்பு நாடாளுமன்றத்துக்கே உள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் நகைச்சுவையாக மாறியுள்ள “நம்பிக்கையில்லாப் பிரேரணை”!

  • January 27, 2026
  • 0 Comments

நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பதை அரசியல் நகைச்சுவையாக எதிரணி மாற்றியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அறிவித்த எதிரணி, அதனை இன்னும் சபாநாயகரிடம் கையளிக்கவில்லை. இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என எதிரணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ முதலில் பிரதமருக்கு […]

இலங்கை செய்தி

அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு நாள் நிர்ணயம்!

  • January 23, 2026
  • 0 Comments

பெப்ரவரி மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆம் திகதி சுதந்திர தினம் என்பதால் சபை நடவடிக்கை இடம்பெறமாட்டாது. 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும். நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மேற்படி தகவலை வெளியிட்டார். ஜனவரி மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு இன்றுடன் நிறைவுக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியை எதிரணியால் கவிழ்க்க முடியாது: அமைச்சர் திட்டவட்டம்!

  • January 22, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. தற்போதைய எதிர்க்கட்சியால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன samantha vidyaratna தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நெருக்கடி நிலையில் இருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். இதற்கிடையில் பேரிடரும் ஏற்பட்டது. எனினும், சவாலை நாம் எதிர்கொண்டோம். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? சஜித் அணிமீது சபையில் சாட்டையடி!

  • January 20, 2026
  • 0 Comments

“பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவுக்கு Dr. Harani Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பதை எதிரணி அறிவிக்க வேண்டும்.” இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கேள்வி எழுப்பினார். “ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணி […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் ஆயுதமாக மாறியுள்ள “கல்வி”!

  • January 17, 2026
  • 0 Comments

கல்வியைக்கூட அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நிலைக்கு எதிரணி வந்துவிட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். பேரிடரை வைத்து அரசியல் நடத்திய எதிரணி, தற்போது கல்வி மறுசீரமைப்பையும் குழப்ப முற்படுகின்றது. இதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் எனவும் அவர் கூறினார். அத்துடன், கல்வியில் ஆபாசத்தை புகுத்துவதற்கு முயற்சி இடம்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் கல்வி மறுசீரமைப்பு நிச்சயம் நடக்கும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சஜித் தலைமையில் ஆராய்வு!

  • January 7, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (07) நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. கல்வி மறுசீரமைப்பு முறையாக இடம்பெறாமை, தரம் ஆறு ஆங்கில பாட புகத்தகத்தில் ஏற்பட்ட தவறு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே கல்வி அமைச்சரான பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. மனோ கணேசன் உட்பட எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற […]

அரசியல் இலங்கை செய்தி

ஏப்ரலில் மீண்டும் நெருக்கடி நிலை: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!

  • December 27, 2025
  • 0 Comments

“எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என்ற கருத்து உள்ளது. இதற்கு அரசாங்கம் இடமளிக்ககூடாது. ஆளும் மற்றும் எதிரணிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க Roshan Ranasinghe தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு , “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிந்தித்து செயல்பட்டால் நல்லது. ஏனெனில் எதிர்வரும் ஏப்ரல் , மே மாதம் ஆகும்போது நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என்ற கருத்து […]

error: Content is protected !!