டேவ்’ புயல் தாக்கம் – பயணிகள் பெரும் சிரமம்
Dave புயல் இங்கிலாந்தை தாக்கியதால் பலத்த காற்று, பலத்த மழை மற்றும் சில பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகி,
வீதி மற்றும் ரயில் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
ஸ்காட்லாந்து, வடமேற்கு வேல்ஸ் மற்றும் வடக்கு இங்கிலாந்தின் பகுதிகளில் சனிக்கிழமை மற்றும் இரவு முழுவதும் பலத்த காற்று வீசிய நிலையில், வெளியிடப்பட்டிருந்த மஞ்சள் நிற எச்சரிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை காலை விலக்கிக் கொள்ளப்பட்டன.
மேலும், வடக்கு இங்கிலாந்து, வடமேற்கு வேல்ஸ் மற்றும் தெற்கு ஸ்காட்லாந்தில் பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்திருந்த செம்மஞ்சள் எச்சரிக்கையும் இரவு நேரத்தில் நீக்கப்பட்டது.
Blackpool பகுதியில், கடும் காற்றின் காரணமாக ஒரு வீடு பகுதியளவில் இடிந்து வீழ்ந்தது.
அந்த வீட்டில் இருந்த பெண் மற்றும் அவரது மகள் அதற்கு முன்பே வெளியேறியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு அன்று நிலைமைகள் படிப்படியாக சீரடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





