இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட நிலை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கவிருந்த விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

கட்டுநாயக்கவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (04) இரவு 10.25 மணியளவில் மெல்பேர்னிலிருந்து கொழும்பு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 605 மோசமான காலநிலை காரணமாக மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதேவேளை, தமாமிலிருந்து அதிகாலை 5.55 மணிக்கு கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் தாமதமாகி வருவதாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!