இலங்கை செய்தி

சிக்கப்பூரியில் உயிரிழந்த இலங்கைப் பெண்!! உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இது இடம்பெற்றுள்ளது.

பிரேதப் பரிசோதனையில் உயரத்தில் இருந்து விழுந்ததில் உடல் மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்களால் மரணம் நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் நேற்று இரவு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

தங்கொடுவ – மோட்டேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த நடிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 41 வயதுடைய திருமணமான பெண்ணே சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்த மரணம் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகத்தின் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி அஸீஸ் அறிவித்தார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் பணியகத்திற்கோ அல்லது இலங்கை தூதரகத்திற்கோ அவரது பணியிடத்தில் பிரச்சினைகள் இருப்பதாக முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content