இலங்கை

இலங்கை: ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாட்டை வினைத்திறனாக மேம்படுத்தத் திட்டம்

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாட்டை வினைத்திறனாக மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள நிதியமைச்சு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களத்தினூடாக குறித்த திட்டத்துக்கான வசதிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வணிக சபையுடன் நிதி பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும கலந்துரையாடியுள்ளதாகவும் நிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல அரச நிறுவனங்கள் தங்களது சேவைகளை இணையத்தளத்தினூடாக மேற்கொள்கின்றன.

இதனூடாக ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் அவ்வாறான அரச நிறுவனங்களுக்குச் செல்லாமல் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

(Visited 17 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்