இலங்கை

இலங்கை – 4 வயது குழந்தை மீது கொடூர தாக்குதல்… சந்தேகநபருக்கு பொலிஸார் வலைவீச்சு

வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

பிபிலே சமிந்த எனப்படும் குகுல் சமிந்த என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் பதவிய சம்பதனுவர பகுதியைச் சேர்ந்தவர்.

குறிப்பிட்ட சந்தேகநபர் தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோவை பக்கத்து வீட்டுக்காரர் பதிவு செய்திருந்தார், இது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்தக் குழந்தையை சந்தேக நபர் தாக்கியிருந்த போதிலும் அவருக்குப் பயந்து எவரும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர். சந்தேக நபர் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content