இலங்கை செய்தி

எரிபொருள் விலை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள சிறப்பு முடிவு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக எண்ணெய் விலை உயரும் பட்சத்தில் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அவதானிப்பு அறிக்கையின் அடிப்படையில் உரிய குழு பரிந்துரைகளை வழங்கும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“மத்திய கிழக்கில் நிலவும்  இராணுவ சூழ்நிலையால், எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. இது குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்பு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

அத்தகைய நிலை ஏற்பட்டால் எண்ணெய் விலையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து தலையிட்டு செயல்படவும் இந்த குழு முடிவு செய்திருந்தது.

இதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த எரிபொருள் கட்டண திருத்தத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் மற்றும் பஸ்களின் கட்டணம் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

See also  இலங்கையில் கனமழை - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

“அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது, ஆனால் பஸ் கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படவில்லை.

எனவே, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளித்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்கள் மற்றும் பஸ்களின் கட்டணங்களை குறைக்க முடிவு செய்ய, இக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content