பொழுதுபோக்கு

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம்… அதுக்கும் மேல… என்னங்க சொல்லுறீங்க?

வெளிநாடுகளுக்கு சென்று பட்டப்படிப்பை முடித்த ரேஷ்மா பசுபுலேட்டி, ஆரம்ப காலத்தில் சாஃப்ட்வேர் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

அதன் பிறகு பிரபல டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்தார்.

அதன் பிறகு சின்னத்திரை நாடகங்களில் அறிமுகமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “மசாலா திரைப்படம்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தற்பொழுது வரை மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் அவர் பங்கேற்ற ஒரு பேட்டியில் பேசும் பொழுது, அவரிடம் சம்பள விவரம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “என் உதவியாளருக்கு நான் மாதம் 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகிறேன். தற்பொழுது ஒரு நாளுக்கு ஒரு லட்சம் என்று, என்னிடம் கேட்கப்படும் கால் சீட்டுக்கு தகுந்தார் போல சம்பளம் பெற்று வருகிறேன்” என்று ஓபனாக கூறி உள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!