பொழுதுபோக்கு

மொத்தத்தையும் கொட்டி கட்டப்படும் ‘விலை உயர்ந்த’ பங்களா… சொந்தக்காரி யார் தெரியுமா?

பிரபல நடிகர் ரன்பீர் கபூர் பிரபல நடிகை ஆலியா பட் இருவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

என்னதான் பெரிய நடிகர்களாக இருந்தாலும் இவர்கள் ஒரு மாதத்திற்கு பல இலட்சங்களை கொடுத்து வாடகை வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள ஒரு சில தகவல்களின்படி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் காட்டிவரும் புதிய வீடு, அவர்களின் மகள் ரஹாவின் பெயரில் இருக்கும் என்று ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

அவர் மைனர் என்பதால் அந்த சொகுசு பங்களாவின் இணை உரிமையாளராக நீது கபூர் இருப்பார் என்று கூறப்படுகிறது. நீது கபூர், ரன்பீர் கபூரின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் நீது கபூர் ஆகியோர் சமீபத்தில் மும்பையின் பாந்த்ராவின் மையத்தில் அமைந்துள்ள அவர்களின் கட்டுமானத்தில் உள்ள பங்களாவில் ஒன்றாகக் காணப்பட்டனர். பாலிவுட் லைஃப் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,

ரன்பீர் தனது மற்றும் ஆலியாவின் ஒரு வயது மகள் ரஹா கபூரின் பெயரில் ‘பங்களாவுக்கு’ பெயரிடுவார் என்று கூறப்படுகிறது.

இது சிறுமி ராஹாவை, பாலிவுட்டின் ‘இளைய மற்றும் பணக்கார நட்சத்திரக் குழந்தையாக’ மாற்றும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய பங்களாவை கட்ட ரன்பீர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு சுமார் 250 கோடி செலவாகும் என்றும், ஷாருக்கானின் மன்னத் மற்றும் அமிதாப் பச்சனின் ஜல்சாவை முறியடித்து மும்பையில் உள்ள ‘மிகவும் விலை உயர்ந்த’ பிரபல பங்களாவாக இது மாறவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

“ரன்பீர் மற்றும் ஆலியா இருவரும் தங்கள் கனவு வீட்டை உருவாக்க கடினமாக சம்பாதித்த பணத்தை சமமாக முதலீடு செய்கிறார்கள் என்றும், அனைத்து பணிகளையும் முடிக்க சுமார் 250 கோடிக்கு மேல் செலவாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் தான் பாலிவுட் உலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் டாக்காக மாறியுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்