பொழுதுபோக்கு

நடிகர்கள் ரஜினி, கமல் சேர்ந்து நடிப்பது உறுதியானது

நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் சேர்ந்து நடிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

நடிகர் நாசர் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் இன்று (08-09-24) தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பிரபலன்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு நடிகர் விஷால் சைக்கிளில் வந்தது பேசுபொருளாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் விஷால் கூறுகையில், ‘நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது நின்றதன் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து சுமையை கூடுதலாக அதிகரித்துள்ளது..

சென்னையில் எந்த திருமண மண்டபத்தில் இல்லாத அளவில் நடிகர் சங்க கட்டிடத்தில் 100 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளது. வங்கியில் கடன் பெறுவதற்கு 50% வைப்பு நிதி வைக்க வங்கி வலியுறுத்தியதால், அதனை திரட்டுவதற்கு 4 மாதம் ஆனது. நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ஒரு கோடி ரூபாய் சங்கத்திற்கு கொடுத்தார்’ என்றார்.

மேலும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க நிதி திரட்டுவதற்காக பிரபலங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

(Visited 27 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!