ஏகாதிபத்திய வழிமுறையை திணிக்கும் புட்டின் – பிரித்தானிய உளவுத்துறை தலைவர் அதிர்ச்சி தகவல்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புட்டின் விரும்பவில்லை என பிரித்தானிய உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறும் பிரித்தானிய உளவுத்துறை அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோரி இவ்வாறான சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரிச்சர்ட் மோரி பங்கேற்றார். கழ்ச்சியில் அவர் பேசியதாவது;
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விரும்பவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கு புட்டின் முன்வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. புட்டின் நம்மை அவருடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
புட்டின் தனது ஏகாதிபத்திய வழிமுறையை திணிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியாது.
உக்ரைனில் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என புட்டின் நினைத்தார். ஆனால், அவரும் மற்றவர்களும் உக்ரைனை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.