இலங்கை

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜிஎஸ்பி சலுகையை பெற்றுக்கொள்ள பாதிப்பாக அமையும் – ஹர்சடி சில்வா!

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ள அவர்,  இலங்கை இந்த வருட இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 500 மில்லியன் டொலர் பெறுமதியான வரிச்சலுகையை பெறும் நெருக்கடியை எதிர்கொள்கின்றது என்றும் கூறினார்.

இலங்கைக்கு அதிகளவு அந்நியசெலவாணியை பெற்றுத்தரும் ஆடைதொழில்துறை இந்த வரிச்சலுகையிலேயே தங்கியுள்ளது எனவும்,  புதிய விதிமுறைகளின் கீழ் இலங்கை பாக்கிஸ்தான் உட்பட ஆறு நாடுகள் ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கு விண்ணப்பிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தொழிலாளர் உரிமைகள் நல்லாட்சி போன்ற விடயங்களை இலங்கை எவ்வாறு பின்பற்றியது என்பதை அடிப்படையாக வைத்தே 2024 முதல் 2034 வரையிலான காலப்பகுதிக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்குவதா என்பதை தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!