Site icon Tamil News

இலங்கையின் கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள வீதியை பயன்படுத்த தடை!

இலங்கையின் கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.

இதன்படி, மைட்லாண்ட் வீதி, டொரிங்டன் சந்திப்பில் இருந்து போக்குவரத்து மற்றும் வீதிக்கான அணுகல் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில்  குறித்த வீதி தடைப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பத்தரமுல்லை சீலரதன தேரரும் கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக கிரிக்கெட் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போலீசார் அவரை நடுவழியில் தடுத்தாலும், பின்னர் கடிதம் கொடுக்க அவருக்கு வாய்ப்பளித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையை நீக்குவது தொடர்பான விவாதம் இன்று (09) பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

Exit mobile version