உலகம்

இத்தாலி மக்களிடம் போப் பிரான்சிஸ் விடுத்துள்ள கோரிக்கை

இத்தாலி மக்களிடம் போப் பிரான்சிஸ் விடுத்துள்ள கோரிக்கை

இத்தாலிய இளைய தம்பதியினர் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தாலியில் குழந்தைகள் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிதும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் பணி சுமை, பொருளாதார சூழல்கள் காரணமாக இளைய தம்பதியினர் குழந்தைகளை பெற்று கொள்வது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலியில் கடந்த ஆண்டில் 4 லட்சம் குழந்தைகளே பிறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து 2033ம் ஆண்டுக்குள் ஆண்டு குழந்தை பிறப்பு விகிதத்தை 5 லட்சமாக அதிகரிக்கும் பிரசாரங்களில் பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் “இத்தாலியில் அதிக குழந்தைகளை பெற்று கொள்வது பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியம். பொருளாதார சிக்கல்களால் தான் இளைய தம்பதியினர் குழந்தைகளை பெற்று கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அவர்களின் பணிக்கான ஊதியம் அதிகரிக்க வேண்டும். இளைய தம்பதிகள் வீட்டில் செல்ல பிராணிகளை அதிகம் வளர்ப்பதை விட, அதிக குழந்தைகளை பெற்று கொண்டு வளர்க்க வேண்டும். நம்பிக்கையுடன் எதிர்காலத்தை விதைப்பது அவசியம்” என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

(Visited 81 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!