இந்தியா

மீண்டும் வாராணசியில் போட்டயிடும் பிரதமர் மோடி

வரும் மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் திகதியை தோ்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் பாஜகவும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை முடக்கிவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் பல்வேறு மாநில பாஜக தலைவா்களுடன் தொகுதிகள் மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்வது தொடா்பாக கடந்த சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 பேர் கொண்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதனை தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலர் வினோத் தாவ்டே வெளியிட்டுள்ளார்.

அதில், வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் 34 மத்திய அமைச்சர்கள் மீண்டும் பாஜக சார்பில் களமிறங்குகின்றனர்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது பாஜக சாா்பில் வெளியிடப்பட்ட முதல் வேட்பாளா் பட்டியலில் பிரதமா் மோடி, அமித் ஷா பெயா்கள் இடம்பெற்றிருந்தன. அதே நேரம், 2019 தோ்தலின்போது தோ்தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகே முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

ஆனால், இம்முறை தோ்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, வேட்பாளா் பட்டியலை அக் கட்சி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content