இலங்கை செய்தி

இலங்கை வந்த வெளிநாட்டவரை நாடு கடத்திய அதிகாரிகள்

இத்தாலி பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அது, குடிவரவுத் துறை அதிகாரிகளால். அவர் 40 வயதான ஈரானிய பிரஜை எனவும், மீண்டும் நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இத்தாலிய கடவுச்சீட்டு குறித்த தகவல்களை கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தேசிய மத்திய பணியகத்திற்கு அனுப்பி வைக்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்தாலியின் தேசிய கடவுச்சீட்டு என்பது சர்வதேச பொலிஸ் தகவல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட கடவுச்சீட்டு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஈரான் பிரஜை நாட்டிற்குள் பிரவேசித்து பின்னர் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

(Visited 3 times, 3 visits today)
See also  இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மற்றும் இராணுவக் குழுவை அனுப்பும் அமெரிக்கா
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content