செய்தி வட அமெரிக்கா

பிரச்சினைகளுக்கு முதியவர்களே காரணம் – டிரம்ப்பை மறைமுகமாக கேலி செய்த ஒபாமா

உலகின் 80 சதவீத பிரச்னைக்கு முதியவர்கள் தான் காரணம் என முன்னாள் ஜனததிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஒபாமா அளித்த பேட்டி ஒன்றில், அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதியவர்களால் தான் உலகில் 80 சதவீதம் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அவர்கள், தங்கள் சாவுக்கு பயப்படுகிறார்கள். முக்கியத்துவம் இல்லாமல் போவதை எண்ணி அஞ்சுகிறார்கள். அதனால் அவர்கள் எதையும் விட்டு விடத் தயாராக இல்லை.

அவர்கள் எல்லாவற்றிலும், தங்கள் பெயரை எழுதி வைக்கிறார்கள். அச்ச உணர்ச்சி அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது என கூறியுள்ளார்.

அவர், 2019ஆம் ஆண்டிலும் ஒரு முறை இதேபோல் பேசியுள்ளார். ‘ஒவ்வொரு பிரச்னையிலும் பாருங்கள். முதியவர்கள் தான் வழி விடாதவர்களாக, பிரச்னைக்கு காரணமானவர்களாக இருப்பர்.

நீங்கள் இந்த வேலையை செய்வதற்கு தான் வந்திருக்கிறீர்கள் என்று அரசியல் தலைவர்களுக்கு நினைவூட்டுவது முக்கியம். அதே வேளையில், நீங்கள் ஆயுள் காலத்துக்கும் அதே வேலையை செய்து கொண்டிருக்க முடியாது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ‘பாராசிட்டமால்’ மருந்து சாப்பிட்டால், குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் என்று சில நாட்களுக்கு முன் டிரம்ப் கூறியிருந்தார்.

அது பற்றி கருத்து தெரிவித்த ஒபாமா. இத்தகைய கருத்துக்கள், பொது சுகாதாரத்தை பாதிக்கும். கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை பாதிக்கும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோரை பதற்றம் அடையச் செய்யும்” என்றார்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி