எதிரணி வெத்து வேட்டு: NPP அரசை அசைக்க முடியாது!
” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் NPP கவிழும் என்ற எதிரணியின் பிரச்சாரம் வெத்து வேட்டாகியுள்ளது.. இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது.”
இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Devananda Suraweera தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டுக்கு, மாணவர் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்ககூடிய வகையில் எந்தவொரு கல்வி மறுசீரமைப்பும் இடம்பெறமாட்டாது.
நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணை என்னவென்பது எமக்கு புரிகின்றது. அதற்கமையவே எமது செயல்பாடு இடம்பெறும்.
மக்களுக்கு துளியளவும் துரோகம் இழைக்காத வகையில் அரசாங்கத்தின் பயணம் தொடரும்.
கல்வி மறுசீரமைப்பென்பது காலத்தின் கட்டாய தேவையாகும். எனவே, இது விடயத்தில் குறுகிய நோக்கில் அரசியல் நடத்துவதற்கு எவரும் முற்படக்கூடாது.
நாட்டுக்கு பொருத்தமான கல்வி முறைமையை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் பிரதமரை இலக்கு வைத்து போலி தகவல்களை பரப்புவதற்கு சிலர் முற்படுகின்றனர். ஆளுங்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும் முற்படுகின்றனர். ஆனால் எதிரணியின் கனவு பழிக்காது. ” – என்றார்.





