உலகம்

பொம்மையிடம் தாயன்பை தேடிய குரங்கு : சரணாலயங்களை விமர்சிக்கும் PETA!

இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் தாயால் கைவிடப்பட்ட பஞ்ச் என்ற குரங்கு,  ஒராங்குட்டான் பொம்மையிடம் தாய் அன்பை தேடி அந்த பொம்மையோடு வலம் வரும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விலங்கு உரிமைகள் குழுவான PETA, இது “விலங்கியல் பூங்காக்களின் கொடுமைக்கு” சான்றாகும் என விமர்சித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் பிறந்த உடனேயே அவரது தாயால் நிராகரிக்கப்பட்ட பஞ்ச், மிருகக்காட்சிசாலை ஊழியர்களால் வளர்க்கப்பட்ட நிலையில் ஏனைய குரங்குகளுடன் இணைவதற்காக விடப்பட்டது.

இருப்பினும் ஏனைய குரங்குகள் அதனை புறக்கணத்த நிலையில், பஞ்ச் தனக்கு வழங்கப்பட்ட குரங்கு பொம்மையை கட்டிப்பிடித்து தூங்குவது, விளையாடுவது என தனியாக நாட்களை கழித்தது.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், விலங்கு நலக் உரிமைக் குழு பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

விலங்கியல் பூங்காக்கள் விலங்குகளை அடைத்து வைப்பதாகவும், அவற்றின் சுயாட்சி மற்றும் காடுகளில் அவை அனுபவிக்கும் சிக்கலான சூழல்கள் மற்றும் சமூக வாழ்க்கையை இழக்கச் செய்வதாகவும் PETA வாதிட்டது.

பஞ்சை ஒரு புகழ்பெற்ற சரணாலயத்திற்கு மாற்ற வேண்டும், அங்கு அவர் பொருத்தமான சமூக பிணைப்புகளுடன் மிகவும் இயற்கையான சூழலில் வாழ முடியும் என்று அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!