புர்ஜ் கலீஃபாவில் வீடு வைத்திருக்கும் அந்த சூப்பர் ஸ்டார்….

துபாய் என்றாலே அதற்கு அடையாளம் புர்ஜ் கலீஃபா தான். உலகின் மிக உயரமான கட்டிடமான இதில், சினிமா டிரைலர்கள் மற்றும் நட்சத்திரங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் காட்டப்படும்.
பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படும் இந்த புர்ஜ் கலீஃபாவில் ஒரு இந்திய நடிகருக்கு சொந்தமாக பிளாட் உள்ளது.
இந்தியாவில் பல சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இருந்தாலும், புர்ஜ் கலீஃபாவில் பிளாட் வைத்திருக்கும் ஒரே நடிகர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மட்டும் தான்.
இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பிளாட்கள் வாங்குவர்.
இதில், மோகன்லால் 29வது மாடியில் ஒரு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட பிளாட்டின் மதிப்பு மட்டும் ரூ. 3.5 கோடி. இதை அவர் தனது காதல் மனைவி சுசித்ரா லால் பெயரில் பதிவு செய்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)