ஐரோப்பா

துருக்கியில் வாசனை திரவியக் கிடங்கில் பாரிய தீவிபத்து – 06 பேர் பலி!

துருக்கியின் வடமேற்கில் உள்ள ஒரு வாசனை திரவியக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திலோவாசியில் (Dilovasi) இன்று இந்த விபத்து நிகழ்ந்ததாக கோகேலி (Kocaeli) மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த தீவிபத்தில் 05 பேர் படுகாயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!