நொய்டாவில் தென் கொரிய காதலனை கொலை செய்த மணிப்பூர் பெண்
நொய்டாவில்(Noida) தென் கொரிய(South Korea) ஆடவர் ஒருவர் மணிப்பூரைச்(Manipur) சேர்ந்த அவரது துணைவியாரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டக் ஹீ யூ(Tak Hee Yoo) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவரை தாக்குதலை தொடர்ந்து அவரது துணைவியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார், ஆனால் அவர் வரும்போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லுன்ஜீனா பமாய்(Lunjina Pamai) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணையின் போது, டக் ஹீ மது அருந்திய பிறகு அடிக்கடி தன்னைத் தாக்கியதாகவும் விரக்தியில் தான் நடந்து கொண்டதாகவும் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, கொலை நடந்த நாளில் மது அருந்தும் போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பமாய் தனது காதலனை மார்பில் குத்தியதாகக் கூறப்படுகிறது.
குடிபோதையில் தனது காதலன் வன்முறையில் ஈடுபட்டதால் தான் அவரை குத்தியதாக பமாய் ஒப்புக்கொண்டுள்ளார்.
கத்தியால் குத்தப்பட்ட காயங்களின் சரியான எண்ணிக்கை மற்றும் மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.





