பொழுதுபோக்கு

சின்ன மீனை போட்டு, பெரிய மீனை பிடிக்கும் KPY பாலா

தமிழ் சினிமா உலகில் காமெடி என்றாலே நினைவுக்கு வரக்கூடிய சில முகங்கள் இருக்கின்றன. அவர்களில் ஒருவர் KPY பாலா. “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியிலிருந்து வந்த அவர், இன்று திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்திருக்கிறார். சமீபத்தில், அவர் நடித்துள்ள காந்தி கண்ணாடி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

“சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும்” இந்த ஒரு டயலாக் மூலமாக பாலா மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

ஆனால், அவர் நல்லது செய்ததற்காக படம் பார்க்க வேண்டுமா என்பது ரசிகர்கள் இடையே விவாதமாகியுள்ளது.

பாலாவின் இந்த வசனம் மக்கள் மனதில் நன்கு பதிந்துவிட்டது. மீம் பக்கங்கள், யூட்யூப் ஷார்ட்ஸ், ரீல்ஸ் எல்லாம் இந்த வசனத்தைப் பயன்படுத்தி ரசிகர்களிடம் செல்வாக்கு பெற்று வருகின்றார்.

இவருடைய நோக்கமே சின்ன சின்ன ரோல்களில் நடித்து கிடைக்கும் பணத்தை தாராளமாக நல்லது செய்து வந்தால், இதன் மூலம் பேரும் புகழும் அடைந்து நம்மளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைத்துவிடும் என்பதுதான் இவருடைய நோக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த காலத்தில் யார் வைரலாக வேண்டும் என்றாலும் அவர்கள் சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும். அதற்காகத்தான் அடித்தளமாக முதலில் நல்லது செய்வது போல் மக்கள் மனதில் இடம் பிடித்து தற்போது ஹீரோவாக அவதரித்து அதன் மூலம் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று இவரை சுற்றி மீம்ஸ்கள் கிரியேட் ஆகி வருகிறது.

பலர் “பாலா நகைச்சுவை மட்டுமல்ல, நல்ல மனசுக்காரர். அவர் நடித்த படம் வந்தால் கண்டிப்பா போய் பாக்ஸ் ஆபீசில் ஆதரிக்கணும்” என்று கூறுகிறார்கள்.

ஆனால் விமர்சகர்கள் “நல்லது செய்வது வேறு, படம் ஹிட் ஆகும் திறன் வேறு. வெறும் சிம்பதி வோட் மட்டும் போதாது. கதை, திரைக்கதை, டைரெக்ஷன் எல்லாம் பொருத்தமாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள்.

பாலா அந்த “சின்ன மீன்” மக்களுக்கு நல்லது செய்து வருவது “பெரிய மீன்” ரசிகர்கள் அன்பை பெற்றிருக்கிறார். இதுவே அவரது வெற்றியின் ரகசியம்.

சமீபத்திய தமிழ் சினிமாவில் யோகிபாபு, சதீஷ், முந்தைய காலத்தில் வடிவேலு போல, பாலாவுக்கும் தனி ஸ்டைல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.

ரசிகர்கள் ஆதரவு அதிகரித்தால், ஹீரோயிசம் கொண்ட கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்