இலங்கை செய்தி

விமானப்படை வீராங்கனை கடத்தல் – தந்தை மகன் கைது

விமானப்படை வீராங்கனையை கடத்திய சம்பவம் தொடர்பில் தந்தை மற்றும் மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சீன துறைமுக விமானப்படை தளத்தில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவரும் அவரது தந்தையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் வறக்காப்பொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடத்தப்பட்ட விமானப்படை வீராங்கனை தனது மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போது காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் விமானப்படை வீராங்கனையை கடத்திச் சென்று வீடொன்றிற்குள் தடுத்து வைத்துள்ளனர்.

இதன்போது, இந்த விமானப்படை வீராங்கனை குறித்த வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content