பொழுதுபோக்கு

இரண்டு மணி நேரத்தில் 40க்கும் அதிகமான சிகரட்டுக்களை ஊதி முடித்த ஜீவா

சினிமாவில் ஆரம்பத்தில் சில கெட்ட பழக்கத்திற்கு அடிமையான சிலர் அதன் பிறகு தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டது உண்டு.

அந்த வகையில் ரஜினி தான் மது மற்றும் சிகரெட் ஆகியவற்றில் அடிமையாக இருந்ததாக கூறியிருக்கிறார்.

அதோடு தினமும் அசைவ சாப்பாடு இருந்தால் தான் சாப்பிடுவேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது தனது மனைவியால் எல்லாவற்றையுமே விட்டுவிட்டு ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் நேரடியாகவே சொல்லி உள்ளார்.

இந்த சூழலில் ரஜினியே மிஞ்சும் அளவிற்கு நடிகர் ஜீவா 2 மணி நேரத்தில் 40 சிகரெட் அடித்ததாக கூறியிருக்கிறார். மிகவும் திறமையான நடிகர் தான் ஜீவா. ஆனால் போராத காலம் அவருக்கு சரியான படங்கள் அமையாமல் இருக்கிறது.

இப்போது ஜீவா இயக்குனர் பா விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் அகத்தியா என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறது.

இந்த சூழலில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஜீவா தன்னுடைய பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போதுதான் கற்றது தமிழ் படத்தை பற்றி பேசினார்.

இந்த படத்தில் சிகிரெட் புடிச்சு டயலாக் பேசுற மாதிரி ஒரு சீன் உள்ளதாம். அப்படி பேசும்போது டயலாக் மிஸ் பண்ணி விடுவாராம். இப்படியே கிட்டத்தட்ட 46 டேக் போய்விட்டதாம்.

அப்போது இரண்டு மணி நேரத்தில் 40-க்கும் அதிகமான சிகிரெட் பிடித்து விட்டேன். அதனால் எனக்கு தலையே சுற்றி விட்டது என்று ஜீவா அந்த பேட்டியில் கூறியிருந்தார்

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்