இலங்கை

இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதாக தகவல்!

இலங்கையில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக பொலிஸார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள நிலையில், மிக முக்கிய குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த குற்றவாளிகள் துபாய் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் பணக்கார தொழிலதிபர்கள் போல் மாறுவேடமிட்டு இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ருமேனியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்வதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்மூலம், எளிதாக விசா கிடைக்கும் நாடுகளும், வெளிநாட்டினர் அதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நாடுகளும் தப்பிச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, டுபாய் அரசு, அந்நாட்டு காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறையினருடன் கலந்தாலோசித்து, இந்த கடத்தல்காரர்களை கைது செய்து இந்த நாட்டுக்கு கொண்டு வருவதற்கான சிறப்பு நடவடிக்கையை தற்போது ராஜதந்திர மட்டத்தில் தொடங்கியுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content