ஹவுதி கிளர்ச்சியாளர் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஏமனில் உள்ள பல ஹவுதி கிளர்ச்சியாளர் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கியுள்ள மூன்று துறைமுகங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹுடைதா, ராஸ் இசா மற்றும் சைஃப் துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைத் தாக்கி வருவதால் இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





