ஈரான் நீர்வழியை ஆயுதமாக்குவதை அனுமதிக்க முடியாது – கொந்தளிக்கும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள்!
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் இருந்தபோதிலும், ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்படவில்லை என்றும், அதன் அணுகல் “கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அபுதாபியின் அரசு எண்ணெய் நிறுவனமான அட்னாக்கின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அல் ஜாபர் ( Sultan Al Jaber) தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையானது உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாத கப்பல் போக்குவரத்து சுதந்திரம் என்ற கொள்கையைச் சீர்குலைக்கும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், “இந்த முக்கிய நீர்வழியை எந்த வடிவத்திலும் ஆயுதமாக்குவதை அனுமதிக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் ஏற்றப்பட்ட சுமார் 230 கப்பல்கள் தற்போது போக்குவரத்திற்காகக் காத்திருக்கின்றன. இது விநியோகத் தாமதங்கள், இறுக்கமான சந்தைகள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது.
ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவது குறித்த நிச்சயமற்ற தன்மை, எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





