செய்தி விளையாட்டு

IPL Match 55 – 133 ஓட்டங்களுக்கு சுருண்ட டெல்லி அணி

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கருண் நாயர்- டுபிளிசிஸ் களமிறங்கினர்.

பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் கருண் நாயர் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அவர் வீசிய 2-வது ஓவரில் டுபிளிசிஸ் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இதனை தொடர்ந்து வந்த போரல் 8, கேப்டன் அக்சர் படேல் 6, கேஎல் ராகுல் 10 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் டெல்லி அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ்- விப்ராஜ் நிகம் ஜோடி சிறிது நேரம் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இதனை தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் இம்பெக்ட் பிளேயர் அஷுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!