இந்தியா

இந்தியா – பச்சிளம் குழந்தை கடத்தல் விவகாரத்தில் மருத்துவமனை உரிமத்தை ரத்துசெய்த உச்சநீதிமன்றம்

பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனையின் உரிமத்தை உடனடியாக ரத்துசெய்யக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.4 லட்சத்திற்கு கடத்தப்பட்ட குழந்தை விற்கப்பட்டது.இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

குழந்தை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் முன்கூட்டியே பிணை வழங்கிய நிலையில், அதை உச்சநீதிமன்றம் ரத்துசெய்தது.மேலும், அதிகாரிகளின் கருணையற்ற அணுகுமுறையையும் கண்டித்தது.

குழந்தை கடத்தல் வழக்கை மோசமாகக் கையாண்டதாகக் கூறி உத்தரப்பிரதேச அரசையும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்ற அமர்வு கண்டித்தது.

நாடு தழுவிய அளவில் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான உத்தரவுகளை அந்த அமர்வு பிறப்பித்தது.

குழந்தை கடத்தல் வழக்குகளின் விசாரணைகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமெனவும் நிலுவையில் உள்ள விசாரணை தரவுகளைச் சேகரித்து, தினசரி விசாரணைகள் மூலம் நடவடிக்கைகளை விரைவுபடுத்த பொருத்தமான வழிமுறைகளை வழங்கவும் இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள், அவர்களின் குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்த மருத்துவமனையின் முழு பொறுப்பு என்றும் அதை மருத்துவமனை நிர்வாகம் செய்யத் தவறினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே