இலங்கை புகைப்பட தொகுப்பு

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா இடம்பெற்றது.

இந் நிகழ்வு நேற்று (22) கல்முனை உப பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது மங்கள விளக்கேற்றலில் ஆரம்பமாகி மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனித்தா பிரதீபனின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதை அடுத்து தலைமையுரையினை தியாகேஸ்வரி ரூபன் மேற்கொண்டார்.

இந்நிகழ்வினை விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தரும் சுயாதீன ஊடகவியலாளருமான குலசிங்கம் கிலசன் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வின் சிறப்புரையை அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இணைப்பாளர் கலைவாணி தயாபரன் உட்பட கௌரவ அதிதிகள் பிரதம அதிதியின் உரைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் டெலினா றொசைரோவின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்,

கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.சி.ஏ.அசீஸ், அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எல்.எம் இர்பான், அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் சட்ட ஆலோசகர் துளாஞ்சினி அருந்தவராஜா, உதவி கல்விப்பணிப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியளலாளருமான சகா தேவராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நிறுவனமானது 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன் இந்நிறுவனம் நடாத்தும் இச்சான்றிதழ் கற்கை நெறிக்காக கல்முனை ,காரைதீவு, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு, திருக்கோவில் ,பொத்துவில், உள்ளிட்ட 6 பிரதேச செயலகத்தில் இருந்து யுவதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

(Visited 17 times, 1 visits today)

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்