இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டில் மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் – சாலிய பீரி

  • April 12, 2023
  • 0 Comments

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டால் நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படுவதற்கு இடமிருக்கிறது. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வரையறை அற்ற அதிகாரம் வழங்குவது மிகவும் பயங்கரமானது என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  ”அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வரையறை இல்லாத அதிகாரம் வழங்கி இருக்கிறது. […]

இலங்கை செய்தி

குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய அனுமதி!

  • April 12, 2023
  • 0 Comments

நாட்டிற்கு வரும் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான ஒப்பந்தங்கள் இம்மாத இறுதியில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் சினோபெக்  ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் என்ற மூன்று நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கு […]

இலங்கை செய்தி

நிறுத்தாமல் சென்ற கார்.. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார்

  • April 12, 2023
  • 0 Comments

பொல்கஹவெல – குருநாகல் வீதியில்  போதைப்பொருளைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் கார் மீது ​பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று (10) காலை 11.00 மணியளவில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டபோதும் அக்காரானது நிறுத்தாமல் சென்றுள்ளது. இத​னையடுத்து பொலிஸார்  அக்கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவே அக்காரை விட்டு மூவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். இதனையடுத்து குறித்த மூவரையும் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக […]

இலங்கை செய்தி

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் 8.2 மில்லியன் ரூபாவை சம்பாதித்த இருவர் கொழும்பில் கைது!

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு கெசல்வத்தை   டாம் வீதியில் 8.2 மில்லியன் ரூபாய் பணத்துடன் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் 8.2 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினரால் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரில் முக்கிய சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என்றும்  மற்றைய நபர் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவர் […]

இலங்கை செய்தி

புத்தாண்டின் பின்னர் கட்சித்தாவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

  • April 12, 2023
  • 0 Comments

புதுவருடத்தின் பின்னர் ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார். கட்சித்தாவல் இடம்பெறவுள்ளதை எங்களால் மறுக்க முடியாது ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் செல்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண எப்போதும் கட்சிதாவும் நோக்கத்துடனேயே உள்ளார் அமைச்சு பொறுப்பை ஏற்பதுகுறித்தும் ஆர்வமாக உள்ளார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார். ராஜித எப்போதும் […]

இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

கடந்த வாரத்துடன் (06) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  311.63 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி  327.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் இன்று சற்று அதிகரித்துள்ளது.  

இலங்கை செய்தி

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

  • April 12, 2023
  • 0 Comments

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஏப்ரல் 09ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிச்சத்தியம் செய்துகொண்டனர். கணக்காய்வாளர் நாயகம் பதவி அடிப்படையில் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராவார். அதற்கமைய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன பதவிச்சத்தியம் செய்துகொண்டார். அது மாத்திரமன்றி ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, நந்தசீலி கொடகந்த, ஞானானந்தராஜா தேவஞானன், ஏ.எம். தர்மஜித் நயனகாந்த ஆகியோரும் பதவிச்சத்தியம் செய்துகொண்டனர்.

இலங்கை செய்தி

கோட்டாபயவை தெரிவு செய்தது தவறுதான் – பகிரங்கமாக தெரிவித்த பொதுஜன பெரமுன

  • April 12, 2023
  • 0 Comments

2019 இல் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் தவறு செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை செய்தி

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு ஜுனில் நிறைவு!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையின் உள்ளக மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் மீளாய்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அதற்கு முன்னர் மறுசீரமைப்புப் பணிகளை முடிக்க முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இணையத்தள கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை […]

இலங்கை செய்தி

இலங்கையில் போலி நாணயதாள்களின் பாவணை அதிகரிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தகர்கள் இந்த நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

error: Content is protected !!