உலகம் செய்தி

தாய்லாந்தில் பரவிவரும் இனந்தெரியாத வைரஸ் : 72 புலிகள் உயிரிழப்பு!

  • February 21, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் இனந்தெரியாத வைரஸ் தொற்றின் காரணமாக சுமார் 72 புலிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் வடக்கு மாகாணமான சியாங் மாயில் (Chiang Mai) உள்ள வனவிலங்கு பூங்காக்களில் பிப்ரவரி 8 முதல் 19 வரை இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. கால்நடை அதிகாரிகளின் முதற்கட்ட சோதனைகளில் பூனைகளிடம் இருந்து வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இறந்த புலிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (anine distemper virus) மற்றும், மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா  (Mycoplasma bacteria) தொற்றும்  […]

உலகம்

ஈரான் விவகாரம் – பொறுமையிழக்கும் ட்ரம்ப்!

  • February 21, 2026
  • 0 Comments

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுமை இழந்து வருவதாக முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரித்துள்ளார். ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது. ஈரரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். இல்லையென்றால் கெட்ட விஷயங்களை” எதிர்கொள்ள நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எச்.ஆர். மெக்மாஸ்டர் (H.R. McMaster), “ஈரானிய ஆட்சிக்கு […]

உலகம் செய்தி

விடுதலைப் புலிகளின் கொள்கைகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டு வருகின்றன – நாமல்

  • February 21, 2026
  • 0 Comments

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களது கொள்கைகள் இன்றும் பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர் வலைப்பின்னல்கள் ஊடாகச் செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்த மாத இறுதியில் அவர் உரையாற்றவிருந்தார். இந்நிலையில் கடும் அழுத்தங்களால் விரிவுரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே […]

இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகருக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

  • February 21, 2026
  • 0 Comments

“இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அநுர அரசே இதற்குப் பதில் சொல்!” இவ்வாறு வலியுறுத்தி யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று சனிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமராட்சி – கரவெட்டியைச் சேர்ந்த ஆசிரியரும் ஊடகவியலாளருமான சு.இராமச்சந்திரன், கடந்த 15.02.2007 அன்று பணி முடிந்து வீடு திரும்பிய போது, துன்னாலை கலிகைச் சந்தி இராணுவ முகாமில் வைத்து இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பியினராலும் கைது செய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டார். இச்சம்பவம் இடம்பெற்று 19 […]

ஐரோப்பா

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு – 05 பேர் உயிரிழப்பு!

  • February 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் (Austrian Alps) மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலத்திற்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 03 பேர் உயிரிழந்தனர். பின்னர் அதற்கு அருகிலுள்ள மற்றொரு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது. இந்த குளிர்காலத்தில், பனிச்சரிவு காரணமாக ஆஸ்திரியாவில் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 40% மக்கள் AI வழிகாட்டுதலையே நம்புகின்றனர் – நிபுணர்கள் எச்சரிக்கை

  • February 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 40 வீத மக்கள் நிதி ஆலோசனைகளுக்காக ChatGPT, Gemini மற்றும் Co-Pilot போன்ற AI செயற்கை நுண்ணறிவு தளங்கள் பயன்படுத்துவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மனித நிதி ஆலோசகர்கள் அதிக செலவானதால், பலர் கட்டுப்பாடற்ற AI வழிகாட்டுதலுக்கு மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. AI வழங்கும் தகவல்கள் தவறானவையாகவோ அல்லது நுகர்வோருக்கு பொருந்தாமலோ இருக்கலாம் என முதலீடு மற்றும் சேமிப்பு கூட்டணியின் கொள்கைத் தலைவர் சோஃபி லெக்ராண்ட்-கிரீன் (Sophie Legrand-Green), எச்சரித்துள்ளார். கணக்கெடுப்பின் படி, 18 முதல் 28 வயதுக்கு […]

உலகம்

சிலியில் நெடுஞ்சாலையில் வெடித்து சிதறிய லொறி!

  • February 21, 2026
  • 0 Comments

சிலி (Chile’s) தலைநகர் சாண்டியாகோவில் (Santiago) உள்ள நெடுஞ்சாலையில் எரிவாயு லொறியொன்று தீப்பிடித்து  வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த லொறி   ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் மேற்படி சம்பவத்தால்   நெடுஞ்சாலையில் பயணித்த சுமார் 50 வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பாரிஸ் அருகே உள்ள இராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு – இளம் வீரர் பலி!

  • February 21, 2026
  • 0 Comments

பாரிஸ் அருகே உள்ள இராணுவ முகாமொன்றில் பிரெஞ்சு வீரர் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 அன்று கிளாமார்ட்டில் (Clamart) உள்ள பெர்சி (Percy)  இராணுவ பயிற்சி மையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மையத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறி வீரர்கள் மது அருந்தியதாகவும், இதன்போது அலெக்ஸாண்ட்ரே லாங்க்பீன்  (Alexandre Lanckbeen) என்ற வீரர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நான்கு வீரர்கள் கைது […]

இந்தியா செய்தி

தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்த விஜய்

  • February 21, 2026
  • 0 Comments

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளதாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கமைய இந்தத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இயங்குவார்கள் என்றும் விஜயம் அறிவித்துள்ளார். தலைமைக் கழக மையத் தேர்தல் அலுவலகத்தின் (Headquarters Central War Room) துணையுடன் தலைமைக் கழகம் அளிக்கும் நெறிமுறைகளுக்கு உள்பட்டு […]

உலகம் செய்தி

பலஸ்தீன ஒற்றுமை உறுதிமொழி – பிரித்தானியாவில் 1,028 கவுன்சிலர்கள் கையெழுத்து

  • February 21, 2026
  • 0 Comments

பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் உறுதிமொழியில் பிரித்தானியாவில் 1,028 உள்ளூர் கவுன்சிலர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த உறுதிமொழி, ஆயுத நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதிகளை விலக்க வேண்டும் என்பதையும், இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறல்களுக்கு கவுன்சில்கள் உடந்தையாக இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. வரவிருக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில் இது முக்கிய பிரச்சினையாக மாறக்கூடும் என பிரச்சாரகர்கள் நம்புகின்றனர். இந்த நடவடிக்கை நெறிமுறை முதலீடுகளை உறுதி செய்யும் முயற்சி என்றும், குடியிருப்பாளர்களின் கோரிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் ஹாக்னி கிரீன் […]

error: Content is protected !!