இந்தியா செய்தி

இந்தூரில் கிணற்றுக்குள் விழுந்து 35 பேர் உயிரிழப்பு!

  • April 19, 2023
  • 0 Comments

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோவிலின் கிணற்று பகுதியில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுக் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், ஆயிரக்கணக்கான மக்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் கிணற்றுக்குள் சிக்கியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 18 மணி நேரமாக குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா செய்தி

கச்சதீவு புத்தர்சிலையை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

  • April 19, 2023
  • 0 Comments

கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் கச்சதீவில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தோற்றுவித்திருந்தது. கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இலங்கை மற்றும் இந்தியவாழ் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், கச்சதீவில் […]

இந்தியா செய்தி

இந்திய அரசாங்கத்தின் மொத்தக்கடன் 155.80 லட்சம் கோடி ரூபாவாக அதிகரிப்பு

  • April 19, 2023
  • 0 Comments

நடப்பு ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் மொத்தக்கடன் 155.80 லட்சம் கோடி ரூபாவாக  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தக் கடன்களில் 148.8 லட்சம் கோடி ரூபாய் உள்நாட்டுக் கடனாகவும், 7 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டுக் கடனாகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பே நாட்டின் கடன் உயரத் தொடங்கியது என்பது புள்ளி விவரங்களிலிருந்து தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2017-18 இல் கடன்களானது 82.9 லட்சம் கோடி ரூபாவாக  இருந்ததாகவும்,  2018-19 இல் 92.5 லட்சம் கோடி ரூபாவாகவும், 2019-20 […]

இந்தியா செய்தி

பாலியல் தொல்லைகள் மற்றும் கொடுமைகளுக்கு எதிராக கலாஷேத்திராவில் மாணவிகள் போராட்டம்

  • April 19, 2023
  • 0 Comments

சென்னையிலுள்ள கலாஷேத்திராவின், ருக்குமணி தேவி நுண்கலை கல்லூரியிலுள்ள மாணவிகளுக்கு அங்குள்ள ஆசிரியர்கள் சிலரால் பாலியல் தொந்தரவு மேற்கொள்ளப்படுவதாக கடந்த ஆண்டு பரதநாட்டிய கலைஞர் லீலா சாம்சன் தனது முகநூலில் பதிவிட்டார் என்பதும், கல்லூரி பணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூரியிருந்ததை அடுத்து இது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த செயற்பாடு குற்றவாளியை தப்பிக்க விடும் செயலா என சந்தேகத்தை எழுவதாகவும் பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விசாரணைகுழுவில் மாணவர் பிரதிநிதி […]

இந்தியா செய்தி

சட்டசபை கூட்டத்தொடரின் போது ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ

  • April 19, 2023
  • 0 Comments

திரிபுரா மாநில சட்டசபை கூட்டத்தொடரின் போது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்படும் வீடியோவில் காணப்பட்ட திரிபுரா பாஜக எம்.எல்.ஏ ஜாதவ் லால் நாத், அவமானகரமான சம்பவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். வடக்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள பாக்பஸ்ஸா தொகுதியின் எம்.எல்.ஏ.வான ஜாதவ் லால் நாத், தனக்கு அழைப்பு வந்தபோது ஆபாசமான வீடியோக்கள் ஒலிக்கத் தொடங்கியதாகக் கூறினார். இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஆபாச வீடியோக்களை பார்க்கவில்லை. திடீரென்று எனக்கு அழைப்பு வந்தது, […]

இந்தியா செய்தி

கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழப்பு

  • April 19, 2023
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரின் பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர், ராம நவமியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது, கோயிலில் ஏராளமானோர் கூடியிருந்தனர். மத்திய இந்திய நகரமான இந்தூரில், இந்து சமயப் பண்டிகையின் போது ஏற்பட்ட இந்த சம்பவத்தில் 30 பேர் கிணற்றில் சிக்கிக் கொண்டனர். இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மேலும் 25 பேர் இன்னும் கிணற்றில் சிக்கியுள்ளதாகவும் […]

இந்தியா செய்தி

தாம்பரம் அருகே சென்று கொண்டிருந்த மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை கொண்டு அடிதார்

  • April 19, 2023
  • 0 Comments

தாம்பரம் அருகே சென்று கொண்டிருந்த மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை கொண்டு அடித்ததால் பயணி ஒருவர் தாடையில் பட்டு காயம் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் நின்னகரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கௌதம் (26) இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு காலை வீட்டிற்கு புறப்பட்ட கவுதம் சென்னை பரங்கிமலை மின்சார ரயில் நிலையத்தில் தாம்பரம் மார்க்கமாக செங்கல்பட்டு செல்லும் மின்சார […]

இந்தியா செய்தி

ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • April 19, 2023
  • 0 Comments

கோவை கிணத்துக்கடவு  நம்பர் 10.முத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனை கோவையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அருண் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜி ஆகியோர் படம் பிடித்து செய்தியாக்கச் சென்றனர். அப்போது, அவர்களைத் தடுத்த சட்டவிரோத கல் குவாரி உரிமையாளர், கல்வாரியை படம் பிடிக்கக் கூடாது என்று மிரட்டி உள்ளார். மேலும் குண்டர்களை வைத்து ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சியிலேயே லைவ் செய்யப்பட்டுள்ளன. […]

இந்தியா செய்தி

அழிந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் பிறந்த சிறுத்தை குட்டிகள்

  • April 19, 2023
  • 0 Comments

தெற்காசிய நாட்டில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பல தசாப்தங்களுக்குப் பிறகு, நமீபியாவில் இருந்து இடம்பெயர்ந்த எட்டு சிறுத்தைகளில் ஒன்றுக்கு நான்கு குட்டிகள் பிறந்ததாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் குட்டிகளின் புகைப்படம் மற்றும் வீடியோவை ட்வீட் செய்தார், இது ஒரு முக்கியமான நிகழ்வு என்று அழைத்தார். அற்புதமான செய்தி” என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். உலகின் அதிவேக நில விலங்குகளான புள்ளிகள் உள்ள பெரிய பூனைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் லட்சிய திட்டத்தின் […]

இந்தியா செய்தி

ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்தினால் அதிகரிக்கின்றது

  • April 19, 2023
  • 0 Comments

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை வரும் ஏப்ரல் 1-ம் திகதி முதல் உயர்கிறது அதன்படி 27 சிகிச்சைகளுக்காக 384 மூலக்கூறுகள் கொண்ட 900 மருந்துகளின் விலை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிமுதல் 12 சதவீதத்தினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது மருந்துகளின் விலையும் உயர்த்தப்பட்டதால் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின்  பொருளாதாரத்தில் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என […]

error: Content is protected !!