இலங்கையில் கடவுச்சீட்டு பெற இன்று முதல் அமுலாகும் வசதி!
இலங்கையில் கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவை மூலம் வீட்டுக்கு பெற்றுக்கொடுக்க […]













