இலங்கை செய்தி

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட்ட அதிகாரிகள்

  • December 1, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வெளியே பாயத் தொடங்கியுள்ளது, இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாகமுல்லைத்தீவு மாவட்டம் – பிரதேச செயலாளர் பிரிவுகளின் அடிப்படையில் பாதிப்பு (குடும்பங்கள் மற்றும் நபர்கள்) பிரதேச செயலாளர் பிரிவு (DS Division) பாதிக்கப்பட்ட குடும்பங்கள் (Families) பாதிக்கப்பட்ட நபர்கள் (Persons) […]

இலங்கை செய்தி

வீதி தடைப்பட்டதால் மணலாறுக்கு படக்குச் சேவை ஆரம்பம்

  • December 1, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது. வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலம் உடைந்த நிலையில் காணப்பட்டதுடன் குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது. இதன் போது கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மக்களை வெள்ள அனர்த்தத்தின் போது மீனவர்கள் படகுகள் மூலம் மீட்டனர். தற்போது இன்றைய தினம்(01.12.2025) குறித்த பகுதி மக்களின் தேவைகருதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒருங்கமைப்பில் இலங்கை கடற்படையின் உதவியுடன் […]

ஐரோப்பா செய்தி

மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த பிரித்தானிய மருத்துவர்கள்

  • December 1, 2025
  • 0 Comments

நீண்ட காலமாக நிலவி வரும் ஊதியப் பிரச்சினை தொடர்பாக, பிரித்தானிய மருத்துவ சங்கம் (British Medical Association – BMA) இங்கிலாந்தில் மேலும் ஒரு சுற்று வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவர்கள் (junior doctors) என அறியப்படும் உறைவிட மருத்துவர்கள் (Resident doctors), டிசம்பர் 17 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டமானது மார்ச் 2023 முதல் மருத்துவர்களின் சங்கத்தால் அறிவிக்கப்படும் 14வது வேலைநிறுத்தம் இதுவாகும். இந்த வேலைநிறுத்தம் குறிப்பாக […]

இலங்கை செய்தி

பொருட்களின் விலையை ஏற்றினால் கடும் நடவடிக்கை: வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

  • December 1, 2025
  • 0 Comments

தற்போதைய பேரிடர் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துதல், பொருட்களைப் பதுக்குதல் அல்லது மறைத்தல் போன்ற நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் (unfair or malicious trading practices) ஈடுபடும் வணிகம் அல்லது தனிநபர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் இன்று (டிசம்பர் 1, 2025) அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி (B.K. Prabath Chandrakeerthi) அவர்கள் கூறுகையில், தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பொதுமக்கள் […]

உலகம் செய்தி

சிங்கப்பூரில் இரண்டு நாட்களில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • December 1, 2025
  • 0 Comments

கடந்த வாரம் சிங்கப்பூரில்(Singapore) போதைப்பொருள் குற்றங்களுக்காக மூன்று பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மொத்த மரணதண்டனை எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் 15 கிராமுக்கு மேல் டயமார்ஃபின்(diamorphine), 30 கிராம் கோக்கைன்(cocaine), 250 கிராம் மெத்தம்பேட்டமைன்(methamphetamine) மற்றும் 500 கிராம் கஞ்சா(cannabis) ஆகியவற்றை விற்பனை செய்தல், கொண்டு செல்வது அல்லது வைத்திருத்தல் உள்ளிட்ட கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், மரண தண்டனையை நீக்குவது மிகவும் மோசமான விளைவுகளுக்கு […]

இலங்கை செய்தி

அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கிய இந்தியா!!

  • December 1, 2025
  • 0 Comments

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல், திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்குவதற்கான 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று(01) திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது. இக்கப்பலை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்ரா, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் சாய் முரளி,கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர,கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரவீந்திர திசேரா,மாவட்ட அரசாங்க அதிபர்,மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் இறங்கு துறையில் வைத்து வரவேற்றனர். […]

உலகம் செய்தி

இலங்கைக்கு உதவ பாகிஸ்தானுக்கு வான்வெளியை அனுமதித்த இந்தியா

  • December 1, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதட்டமான இருதரப்பு உறவுகளுக்கு மத்தியில், ஒரு குறிப்பிடத்தக்க மனிதாபிமான நடவடிக்கையாக, சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு இந்தியா பாகிஸ்தானின் விமானம் தனது வான்வெளியைக் கடந்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது. டிசம்பர் 1, 2025 அன்று இந்திய நேரப்படி (IST) பிற்பகல் 1:00 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ அனுமதிக் கோரிக்கையைச் சமர்ப்பித்தது. இந்திய அதிகாரிகள் இந்தக் கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்து, அன்றைய தினமே மாலை […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

விபத்தில் உயிரிழந்த விமான படைத்தலைவர் நிர்மல் சியம்பலாபிட்டியவுக்கு பதவி உயர்வு

  • December 1, 2025
  • 0 Comments

நேற்று லுனுவிலவில்(Lunuwila) ஏற்பட்ட மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளான பெல் 212(Bell 212) ஹெலிகாப்டரின் விமானிக்கு இலங்கை விமானப்படை மரணத்திற்குப் பின் பதவி உயர்வு வழங்கியுள்ளது. அதன்படி, லுனுவில சம்பவத்தின் போது உயிர் தியாகம் செய்த விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய(Wing Commander Nirmal Siyambalapitiya), மரணத்திற்குப் பின் குரூப் கேப்டன்(Group Captain) பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். அவரது சிறந்த சேவை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பு மிகுந்த மரியாதையுடன் மதிக்கப்படுகிறது […]

ஐரோப்பா செய்தி

கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் மரணம்

  • December 1, 2025
  • 0 Comments

கிழக்கு உக்ரைன்(eastern Ukraine) நகரமான டினிப்ரோவில்(Dnipro) ரஷ்யா(Russia) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “நாற்பது பேர் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, காயமடைந்தவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன” என்று டினிப்ரோ பிராந்திய ஆளுநர் விளாடிஸ்லாவ் கெய்வனென்கோ(Vladyslav Gaivanenko) குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்(Steve Witkoff) […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு நன்கொடை மற்றும் நிவாரண உதவியை அறிவித்த சீனா

  • December 1, 2025
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்றுவரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக சீன(China) அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், 10 மில்லியன் ரிங்கிட் பெறுமதியான நிவாரணப் பொருட்களும் இலங்கைக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சீன மக்கள் இலங்கையுடன் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை உறுதிமொழி மீண்டும் உறுதிப்படுத்துவதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!