திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் பாதிப்பு!!
திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் இன்று (02) வரைக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே. சுகுணதாஸ் தெரிவித்தார். கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் இன்று (02) காலை 7:00 மணி வரைக்கும் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 212 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளிலும் 6615 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 521 குடும்பம் தம்பலகாமம் […]













