அரசியல் இலங்கை

அவசரகால சட்டத்தை அடக்குமுறை ஆயதமாக பயன்படுத்தவில்லை: ஜனாதிபதி விளக்கம்!

  • December 6, 2025
  • 0 Comments

மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக மக்களை ஒடுக்குவதற்கு அது பயன்படுத்தப்படவில்லை. அரசமைப்பைமீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தைத் தயாரிப்பது அனைத்து அமைச்சுகளினதும், அரச திணைக்களங்களினதும் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களினதும் கடமை ஆகும். எனினும், அத்தகைய திட்டம் எதுவும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அதன்படி, இந்த நேரத்தில் அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செயல்படுதல் பலவீனமாக உள்ளது […]

இலங்கை

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் கோர விபத்தை ஏற்படுத்திய லொரி

  • December 6, 2025
  • 0 Comments

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை திசையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி வேகமாக வந்த லொரி ஒன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனங்களுடன் மோதிய லொரி ரயில் தண்டவாளத்தில் நின்றுள்ளது. பம்பலப்பிட்டி பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக […]

செய்தி விளையாட்டு

நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐசிசி

  • December 5, 2025
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) இந்த ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான ஆண்களுக்கான வீரர் விருதுக்கான தேர்வு செய்யப்பட்ட வீரர்களை அறிவித்துள்ளது. அந்தவகையில், தென் ஆப்பிரிக்காவின்(South Africa) சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர்(Simon Harmer மற்றும் பங்களாதேஷின்(Bangladesh) தைஜுல் இஸ்லாம்(Taijul Islam) மற்றும் பாகிஸ்தானின்(Pakistan) முகமது நவாஸ்(Mohammad Nawaz) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு(India) எதிரான டெஸ்ட் தொடரில் 8.94 என்ற சராசரியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹார்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அயர்லாந்துக்கு(Ireland) எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் […]

இலங்கை செய்தி

அரசாங்க வாகனம் எனக்கு வேண்டாம் – இராமநாதன் அர்ச்சுனா

  • December 5, 2025
  • 0 Comments

அரசாங்கத்தால் வழங்கப்படும் கெப் வாகனம் எனக்கு வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archuna) தெரிவித்துள்ளார். “ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. அந்த வாகனம் எனக்கு தேவையில்லை. மக்கள் பரிதவிக்கும் போது வாகனம் எதற்கு? எனது வாகனத்துக்குரிய பணத்தை மலையக மக்களுக்கு வழங்கவும். வடக்கு, கிழக்குக்கு புலம்பெயர் தமிழர்களின் பணத்தை கொண்டுவருவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்” என்று அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று அர்ச்சுனா எம்.பி. தனது உரையின்போது […]

உலகம் செய்தி

உயர் மருத்துவ சிகிச்சைக்காக கலீதா ஜியாவின் லண்டன் பயணம் ஒத்திவைப்பு

  • December 5, 2025
  • 0 Comments

வங்காளதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவரும் முன்னாள் பிரதமருமான கலீதா ஜியாவின்(Khaleda Zia) மருத்துவ விமானம் தாமதமானதாலும் அவரது உடல்நிலை சிறிது மோசமடைந்ததாலும் மேம்பட்ட சிகிச்சைக்காக லண்டனுக்குச் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் மிர்சா ஃபக்ருல்(Mirza Fakhrul) தெரிவித்துள்ளார். இந்நிலையில், வங்காளதேச ஊடக நிறுவனமான UNBயிடம் பேசிய மிர்சா ஃபக்ருல், கத்தார்(Qatar) எமிரால் வழங்கப்பட்ட சிறப்பு விமான ஆம்புலன்ஸ் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக டாக்காவிற்கு(Dhaka) வராததால் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

இலங்கை செய்தி

இலங்கையை மீட்க உலக தலைவர்களை அழைக்கவும் – ஹக்கீம் யோசனை

  • December 5, 2025
  • 0 Comments

இலங்கையை மீட்பதற்காக சர்வதேச கொடையாளர் மாநாட்டை அடுத்த இரு வாரங்களுக்குள் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்(Anura Kumara Dissanayaka) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். “ இலங்கையில் பேரிடர் ஏற்பட்டுள்ளதால் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளது. எனவே, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட உலக நாடுகளின் தலைவர்களை இதற்கு அழைக்கலாம். […]

உலகம் செய்தி

பாகிஸ்தானின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதியாக அதிகாரம் பெறும் அசிம் முனீர்

  • December 5, 2025
  • 0 Comments

நாட்டின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக(CDF) ஐந்து ஆண்டுகளுக்கு ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை(Field Marshal Syed Asim Munir) நியமிக்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். “பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை 5 ஆண்டுகளுக்கு பாதுகாப்புப் படைத் தலைவராகவும் அதே நேரத்தில் ராணுவத் தலைமைத் தளபதியாகவும் நியமிக்க ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி(Asif Ali Zardari) ஒப்புதல் அளித்துள்ளார்” என்று அலுவலகம் Xல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படைத் தலைவர் பதவி […]

இலங்கை செய்தி

மகாவலி கங்கையின் அணைக்கட்டை புனரமைக்க நடவடிக்கை

  • December 5, 2025
  • 0 Comments

திருகோணமலை(Trincomalee) மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார(W. G. M. Hemantha Kumara) கள விஜயம் மேற்கொண்டுள்ளார். சூரியபுர(Suriyapura) காவல்துறை பிரிவுக்குட்பட்ட சமகிபுர – வம்மிவுர(Samakipura – Vammivura) பகுதியில் உள்ள மகாவலி(Mahaweli) கங்கையின் அணைக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளது. அதனை மீள புனரமைப்பது தொடர்பான கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். குறித்த அணைக்கட்டினை மீளக்கட்டியெழுப்ப தேவையான […]

செய்தி பொழுதுபோக்கு

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை(Warner Bros. Discovery) $83 பில்லியனுக்கு வாங்கும் நெட்ஃபிக்ஸ்(Netflix)

  • December 5, 2025
  • 0 Comments

பிரபல ஒளிபரப்பு நிறுவனமான நெட்ஃபிக்ஸ்(Netflix), திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி(Warner Bros. Discovery) நிறுவனத்தை கிட்டத்தட்ட $83 பில்லியனுக்கு வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு திரைப்பட பட்டியல் மற்றும் மதிப்புமிக்க ஸ்ட்ரீமிங் சேவையான HBO Maxஐ அணுக அனுமதிக்கிறது. 2019ம் ஆண்டில் டிஸ்னி ஃபாக்ஸை(Disney Fox) $71 பில்லியனுக்கு கையகப்படுத்தியதிலிருந்து பொழுதுபோக்கு துறையில் நடந்த மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும். “இன்றைய அறிவிப்பு உலகின் இரண்டு சிறந்த ஒளிபரப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்கிறது” […]

இலங்கை செய்தி

மொட்டு கட்சி அரசுக்கு ஆதரவா? – நாடாளுமன்ற உறுப்பினர் சானக விளக்கம்

  • December 5, 2025
  • 0 Comments

2026ம் நிதி ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு நாம் எதிராக வாக்களிக்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி(Sri Lanka Podujana Peramuna) அறிவித்துள்ளது. எனினும், இதன்மூலம் தமது கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்றது என அர்த்தப்படாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி. சானக(DV.Chanaka) தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சானக எம்.பி, “அனர்த்தத்துக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டமே இது. இதனை நிறைவேற்றி எவ்வித பயனும் இல்லை. எனவே, புதிய வரவு- […]

error: Content is protected !!