இலங்கை

ஜீலையுடன் மூடப்படும் இலங்கைக்கான நோர்வே தூதரகம்

  • July 24, 2023
  • 0 Comments

இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31ம் திகதியுடன் இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஓகஸ்ட் 01 முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்கும் என்று தூதரகம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்தின் முகநூல் பக்கம் மூடப்படும் எனத் தெரிவித்துள்ள தூதரகம், புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகத்தின் பக்கத்தைப் பின்தொடருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா, […]

இந்தியா

அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக் கூடாது! சீமான் ஆவேசம்

சட்டப் புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கரின் புகழ் என்றும் வாழும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிஞர் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத் துறையின் அறிவிப்பு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டப் புரட்சியாளர் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைப்பதைத் தவிர்ப்பதை ஏற்க […]

ஐரோப்பா

தலைநகர் மொஸ்கோவில் ஆளில்லா விமான தாக்குதல்..

  • July 24, 2023
  • 0 Comments

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவலை வெளியாகி உள்ளது. மொஸ்கோவிலுள்ள இரு கட்டடங்கள் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ வான்பரப்பில் உக்ரேனின் இரு ட்ரோன்களை தாம் சுட்டுவீழ்த்தியாகவும், அவற்றில் ஒன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கட்டடத்துக்கு அருகில் ஒரு ட்ரோன் வீழ்ந்ததாகவும் மற்றொரு அலுவலகக் கட்டடமொன்றின் மீது மோதியதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரேனிடமிருந்து ரஷ்யா […]

இலங்கை

வேலை நிறுத்தத்தை கைவிட்ட ரயில்வே சாரதிகள்!

  • July 24, 2023
  • 0 Comments

ரயில்வே சாரதிகள் தனது வேலை நிறுத்த போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர. ரயில்வே அதிகாரிகளுடனான மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயந்திர சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று (23.07) மாலை முதல் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன. பல புதிய ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கான புகையிரத திணைக்களத்தின் முயற்சிகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

திருமலையில் கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு

  • July 24, 2023
  • 0 Comments

திருகோணமலை நகரை அன்மித்த கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் இன்று (24) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பீ. மதன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் நகர சுத்திகரிப்பு மாத்திரமல்லாது கடற்கரை மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் அனைத்து இடங்களிலும் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் திருகோணமலை டைக் வீதியில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

டுவிட்டரின் புதிய லோகோ! எலான் மஸ்க் அதிகாரபூர்வ அறிவிப்பு

உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் ட்விட்டரின் சின்னமான பறவை சின்னத்தை X என மாற்றி இருப்பதை அதிகாரபூர்வ அறிவித்துள்ளார். எலான் மஸ்க் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது திட்டங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இன்று காலை அமெரிக்க நேரப்படிTwitter.comஐ X.com என சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார். டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை  காணலாம்.  

இலங்கை

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : வலுவான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக பந்துல உறுதி!

  • July 24, 2023
  • 0 Comments

ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக அமைச்சரவை வலுவான தீர்மானங்களை எடுக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடரூந்து பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் இன்று (24.07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,  “பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் பொது முகாமையாளரிடம் பேசி தீர்வு காணுங்கள் என புகையிரத திணைக்களத்திற்கு கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன்  கடந்த […]

இலங்கை

பொதுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

  • July 24, 2023
  • 0 Comments

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள வணிக செயலகத்தின் பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த அலுவலகம் தற்போது கொள்ளுப்பிட்டி அனகாரிக தர்மபால மாவத்தையில்  தற்காலிகமாக இயங்கி வருகின்றது. இதனை கொழும்பு 10 மருதானை வீதி, 79 டெக்னில் சந்தியில் அமைந்துள்ள வளாகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை 28 முதல் ஜூலை 31 வரை பொதுமக்களுக்கான சாதாரண சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அவசரகால சேவைகள் ஆன்லைனில் பராமரிக்கப்படுகின்றன, அதற்காக […]

இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூலை 24) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.55 ரூபாவாகவும், கொள்வனவு விலை 334.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. வளைகுடா நாணயங்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

ஜவானில் ஸ்டைலிஷ் வில்லனாக விஜய் சேதுபதி…

  • July 24, 2023
  • 0 Comments

தமிழில் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இப்படம் தேசிய விருதும் வென்றது. இப்படத்திற்கு பின்னர் பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தர்மதுரை, சேதுபதி, 96 என தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த விஜய் சேதுபதியை வில்லனாக அறிமுகப்படுத்தியது கார்த்திக் சுப்புராஜ் தான், அவர் இயக்கிய பேட்ட படம் மூலம் வில்லனாக எண்ட்ரி கொடுத்தார் மக்கள் செல்வன். பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த பின்னர் […]

error: Content is protected !!