உலகம் செய்தி வாழ்வியல்

நாம் தூக்கி எறியும் பொருளை விரும்பி உட்கொள்ளும் ஜப்பான் மக்கள்!

  • December 8, 2025
  • 0 Comments

ஏழைகளின் ஆப்பிள் வாழைப்பழம் இப்படி சொல்லிக் கேள்வி பட்டிருப்போம் இல்லையா? காரணம் சாதாரண விலையில் கூட வாழைப்பழத்தை வாங்க முடியும். இந்த பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும். பழத்தை சாப்பிடும் நாம் அதன் தோலை வீசி விடுவோம். சில பெண்கள் அந்த தோலை முகத்தில் தடவி பொலிவு கிடைக்க முயற்சி செய்வார்கள். ஆனால் ஜப்பானில் வாழைப் பழத்தை தோலோடு சாப்பிடுவார்கள் என்றால் நம்ப முடிகின்றதா? ஆமாம் அவர்கள் தோலையும் சேர்த்து தான் சாப்பிடுவார்கள். […]

இலங்கை

மீட்பு பணிக்காக அமெரிக்க படையினரும் களத்தில்!

  • December 8, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பல நாடுகளும் நேசக்கரம் நீட்டிவரும் நிலையில், மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 60 மீட்புப் படையினர் கொழும்பு வந்துள்ளனர். அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ஹெல்குலெஸ் விமானங்களில் உதவிப் பொருட்கள் சகிதம் இவர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடு டுமுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் விநியோகிப்பதற்கும் அமெரிக்க படையினர் இலங்கை விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை […]

இலங்கை

தொடரும் உதவிகள்: தமிழக நிவாரணமும் கையளிப்பு!

  • December 8, 2025
  • 0 Comments

இலங்கை மக்களுக்காக, தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. தமிழக அரசினால் அனுப்பப்பட்ட 1000 தொன் நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதியான 300 மெட்ரிக் தொன் பொருட்கள், இந்திய கடற்படையின் 3 தரையிறங்கு கலங்கள் மூலம், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. மேலும் 700 தொன் உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றொரு கப்பல் இன்று காலை திருகோணமலையை வந்தடையவுள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பொருட்களை, இந்திய தூதுவர் […]

இலங்கை செய்தி

பலாலியில் தரை இறங்கிய அமெரிக்க வான்படை சரக்கு வானூர்தி.

  • December 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் சர்வதேச வானூர்தி நிலையத்தில் அமெரிக்காவின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமரிக்காவின் US Air Force C-130Js வான்படை சரக்கு வானூர்தி இன்று தரையிறங்கியது. அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் நேற்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன. நேற்று கட்டுநாயக்க வந்தடைந்த இந்த விமானம் வடக்குக்கான நிவாரணப்பொதிகளை இறக்குவதற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு புறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து இன்றைய தினம் அமெரிக்க வான்படை சரக்கு வானூர்தி பலாலி வானூர்தி நிலயத்தில் தரை […]

இலங்கை

கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் பலி!

  • December 8, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் கண்டி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் 35 மாணவர்களும், 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. அத்துடன், கண்டி மாவட்டத்தில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிங்கள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கண்டி மாவட்டத்தில் மொத்தமாக 232 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காணாமல்போயுள்ளனர். ஆயிரத்து 800 வீடுகள் முழுமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. பேரிடரால் கண்டி மாவட்டத்தில் 51 […]

இலங்கை செய்தி

யாழில் சர்ச்சை: 36 கோடி நிவாரண நிதி செயலாளர் அதிரடி நடவடிக்கை

  • December 8, 2025
  • 0 Comments

வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவருக்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய அரச அதிகாரிகளே பொறுப்பு என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் கிராம அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டுமென அவர் கூறியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 25, 000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக […]

இலங்கை

பெரிதும் பாதிக்கப்பட்ட வெலிமடை பிரதேசத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி

  • December 8, 2025
  • 0 Comments

இலங்கையில் டித்வா புயலின் தாக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்ட பதுளை – வெலிமடை ரெண்டபொல பகுதியை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பார்வையிட்டார். விஜயத்தின் போது, ​​நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளுடன் ஜனாதிபதி உரையாடினார். ஜனாதிபதியுடன் பேசியபோது, ​​பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் துயரங்களை விளக்கினர், அதே நேரத்தில் ஜனாதிபதி அவர்களின் நலம் மற்றும் தேவையான உதவிகள் குறித்து விசாரித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடும் ஜனாதிபதி என்பதால் மக்களிடையே […]

இலங்கை

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞர் – சுயாதீன விசாரணைக்கு அழைப்பு!

  • December 8, 2025
  • 0 Comments

மட்டக்களப்பில் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்துறையினரின் காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் ராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள சின்ன உப்போடையைச் சேர்ந்த ரினோஷன் என்ற 23 வயதுடைய இளைஞர், டிசம்பர் 2 ஆம் திகதி திருட்டு குற்றச்சாட்டில் மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது குடும்பத்தினர் கடைசியாக அன்று மாலை அவரை காவல் நிலையத்தில்  பார்த்ததாக தெரிவித்துள்ளனர். மறுநாள் […]

இலங்கை

குளிப்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

  • December 8, 2025
  • 0 Comments

அனர்த்தம் ஏற்பட்ட இடங்களுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார். மேலும், வலுவான நீரோட்டத்துடன் பாயும் நீரினுள் குளிப்பதையோ அல்லது நுழைவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்றும், ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 ஊடாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கனமழை […]

ஐரோப்பா

பிரித்தானியர்களுக்கு மின் வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

  • December 8, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில் காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையானது இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 04.00 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேல்ஸ் (Wales) மற்றும் இங்கிலாந்தின் தென்மேற்கின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!