உலகம் செய்தி

ஆசியாவில் போர் மூண்டால் சீனாவிடம் தோல்வியை தழுவும் அமெரிக்கா!

  • December 12, 2025
  • 0 Comments

சீனா மற்றும் தைவானுக்கு இடையே போர் மூளும் பட்சத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் நிச்சயமாக சீனாவின் கையில் அமெரிக்கா தோல்வியை தழுவும் எனக் கூறப்படுகிறது. பென்டன் வெளியிட்டுள்ள இரகசிய அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் வெளியாகியுள்ள ஓவர்மேட்ச் ப்ரீஃப் (Overmatch brief) அறிக்கையில்,  அமெரிக்க போர் படைகள், முக்கிய போர்க்கப்பல்கள் மற்றும் செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளை கூட அமெரிக்கா பயன்படுத்துவதற்கு முன்பே அதனை ஊடுறுவ அல்லது முடக்க  சீனாவால் முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]

உலகம் செய்தி

காசாவை தாக்கும் புயல் பைரன் – இயற்கை சீற்றங்களும் விட்டுவைக்கவில்லை

  • December 12, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரால் அழிக்கப்பட்ட காசா பகுதியில் புயல் பைரன் காரணமாக, கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் ஏராளமான வீடுகள், சுவர்கள் மற்றும் கூடாரங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சீரற்ற வானிலையை எதிர்கொள்ளும் பலஸ்தீனியர்களுக்கு போதுமான வளங்கள் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. […]

ஐரோப்பா

ஆஸ்திரியாவில் பாடசாலை மாணவர்கள் முகத்தை மூடி ஆடைகள் அணியத் தடை!

  • December 12, 2025
  • 0 Comments

பாடசாலைகளில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதை ஆஸ்திரியா அரசாங்கம் தடை செய்துள்ளது. இது பாலின சமத்துவத்திற்கான தெளிவான உறுதிப்பாட்டை” பிரதிபலிப்பதாக கூட்டணி அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட சட்டம் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் ஹிஜாப் அல்லது பர்தா போன்ற பாரம்பரிய முஸ்லிம் ஆடைகள் அணிவதைத் தடை செய்கிறது. இந்தத் தடை அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். மேற்படி சட்டத்திற்கு இணங்கத் தவறும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியப் பொருளாதாரம் ஒக்டோபரில் வீழ்ச்சி! வலுவிழந்த பவுண்ட் மதிப்பு.

  • December 12, 2025
  • 0 Comments

ஒக்டோபர் மாதத்தில் பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1% வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இன்று காலை பவுண்டின் மதிப்பும் சர்வதேச சந்தையில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நேற்றுவரை ஸ்டெர்லிங், இரண்டு மாதங்களில் காணாத உச்சத்தை எட்டியிருந்ததுடன், அதன் தொடர்ச்சியான மூன்றாவது வாராந்திர இலாபத்திற்கும் தயாராக இருந்தது. ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகள் வெளியாகியவுடன், பவுண்டின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக $1.339இலிருந்து $1.338ஆக உடனடியாகக் குறைந்தது. அதே நேரத்தில், பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் விளைவாகப் பாதுகாப்பான […]

இலங்கை செய்தி

டிட்வா பேரழிவு – வழிகாட்டல்களை வெளியிட்ட மனநல மருத்துவர்கள் கல்லூரி.

  • December 12, 2025
  • 0 Comments

டிட்வா புயல் காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி வழிகாட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, பேரழிவின் உடனடி உணர்ச்சிப்பூர்வ விளைவுகளை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவும் மற்றும் மனநல மீட்சிக்கான படிகளை ஊக்குவிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில், பேரழிவுக்குப் பிறகு மன அழுத்தம், சோகம், பயம் அல்லது குழப்பம் இயல்பானது என்றும், மீட்சிக்கு மனநலத்திற்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய வழிகாட்டுதல்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 01.சிறியளவான […]

ஐரோப்பா செய்தி

ஆல்டி: கிறிஸ்துமஸ் வாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ‘அமைதியான ஷாப்பிங் நேரம்.

  • December 12, 2025
  • 0 Comments

ஆல்டி சூப்பர்மார்க்கெட்டில் கிறிஸ்துமஸ் வாரத்தில் வாடிக்கையாளர்களுக்கான ‘அமைதியான ஷாப்பிங் நேரங்கள்’ அறிவிப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பல்பொருள் அங்காடிகளில் ஏற்படும் பெரும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க விரும்பும் கடைக்காரர்களுக்காக, சர்வதேச சூப்பர்மார்க்கெட் சங்கம் ஆல்டி (Aldi) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜெர்மனியைத் தாயகமாகக் கொண்ட ஆல்டி, ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், பண்டிகைக் காலத்தில் அதன் கடைகளில் அமைதியான நேரங்களை ஆல்டி அறிவித்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் […]

இலங்கை

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

  • December 12, 2025
  • 0 Comments

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் செலுத்திய ஜீப் வண்டி நேற்று இரவு மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், சப்புகஸ்கந்த பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை

ஜே.வி.பி தலைவர்கள் பலர் V8 வாகனங்களையே பயன்படுத்துகின்றனர் – அர்ச்சுனா எம்.பி கடும் குற்றச்சாட்டு

  • December 12, 2025
  • 0 Comments

ஜனாதிபதி முதல் பெரும்பாலான ஜே.வி.பி தலைவர்கள் V8 வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஜே.வி.பி அரசாங்கத்தை நம்பும் கட்சி உறுப்பினர்களுக்கு இவை பற்றி தெரியாது என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பயன்படுத்து் வாகனம் வேறு யாரிடமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ”எம்.பிகளுக்கான வாகன இறக்குமதியை நிறுத்த வேண்டும். ஒருவர் எம்.பி.யாகவும் அமைச்சராகவும் ஆவதால் சூப்பர் வாகனங்கள் தேவையில்லை. இருப்பினும், ஜனாதிபதி தொடங்கி அரசாங்கத்தில் பலர் V8 […]

செய்தி வாழ்வியல்

உடல் எடையைக் குறைக்க 4 ‘எளிய’ மற்றும் பயனுள்ள வழிகள்!

  • December 12, 2025
  • 0 Comments

1. புரதச்ச த்து நிறைந்த காலை உணவு (Protein-Rich Breakfast) இதனை சாப்பிடுவதன் மூலம் நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கவும் புரதச்சத்து உதவுகிறது. உதாரணமாக முட்டை, ஓட்ஸ் (ஓட்மீல்), நட்ஸ் மற்றும் விதைகள் (சியா விதை, ஆளி விதை), பயறு வகைகள் (பருப்பு, கொண்டைக்கடலை), குயினோவா கஞ்சி, மத்தி மீன். இவைகளை சாப்பிடுவதால் வயிறு நிறைவாக இருப்பது போன்ற உணர்வைத் தந்து, சிற்றுண்டி (Snacks) சாப்பிடும் ஆவலைக் குறைக்கும். 2. நார்ச்சத்து […]

ஆசியா

உலகின் முதல் தானியங்கிப் கப்பல் சேவை ஜப்பானில் ஆரம்பம்

  • December 12, 2025
  • 0 Comments

உலகில் முதன்முறையாகத் தானியங்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயணிகள் கப்பல் சேவை ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஒகாயாமா, ஷோடோஷிமா தீவுக்கு இடையே இந்த கப்பல் சேவை நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொலைதூர தீவுகளில் வசிக்கும் மக்களின் போக்குவரத்தை இது உறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், கடல் சார்ந்த தளவாடங்களை நிலைப்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் இந்தத் தானியங்கி முறை உதவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!