இலங்கை

ஐ.நாடுகளின் கூட்டத்தொடர் முடிவடையும் முன் கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தையும் சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும்! சிறீதரன் நம்பிக்கை

  • September 11, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சரியான விடையை தருவதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (11) இடம்பெறும் இடத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்பு அகழப்பட்ட முறைக்கும் தற்போது அகழப்படுகின்ற முறைக்கும் வித்தியாசம் இருப்பதனை பார்க்க முடிந்தது. பல்கலைக்கழக மாணவர்களும் தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தினை சேர்ந்தவர்களுடைய வழிகாட்டல் ஆலோசனைகளோடு நுணுக்கமாக தொல்பொருள் […]

ஆசியா செய்தி

கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் 150 பேர் பலி

  • September 11, 2023
  • 0 Comments

கிழக்கு லிபியாவில் வெள்ளம் ஏற்பட்டதில் 150 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், “டேனியல்” புயல் மத்திய தரைக்கடலை துடைத்த பின்னர், துருக்கி, பல்கேரியா மற்றும் கிரீஸை தாக்கியது. “டெர்னா, ஜபல் அல்-அக்தர் பகுதி மற்றும் அல்-மர்ஜ் புறநகர்ப் பகுதிகளில் டேனியல் புயல் விட்டுச் சென்ற வெள்ளம் மற்றும் அடைமழையின் விளைவாக 150 பேர் கொல்லப்பட்டனர். என லிபியாவில் பெங்காசியை தளமாகக் கொண்ட நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் மசூத் தெரிவித்தார், நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் இன்னும் கடினமான பகுதிகளில் […]

விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு 357 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

  • September 11, 2023
  • 0 Comments

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இந்த ஜோடி முறையே 56 மற்றும் 58 ரன்களை குவித்து அசத்தினர். அடுத்த வந்த விராட் கோலி மற்றும் […]

இலங்கை

கொக்குதொடுவாய் மனித புதைகுழி சாட்சியங்களை சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி கிடையாது! கஜேந்திரகுமார் அதிருப்தி

  • September 11, 2023
  • 0 Comments

உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இன்று (11) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார் ஆவணப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று . குற்ற வழக்குகளிலே இவை தான் சாட்சியம். சாட்சியத்தை பெற்று நீதிமன்றத்தின் முன்பாக […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்! இதுவரை ஐந்து உடற்பாகங்கள் மீட்பு

  • September 11, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (11) ஐந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஐந்தாம் நாள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்தது. அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா இன்றையதினம் மூன்று உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட இரண்டு உடற்பாகங்களுடன் ஐந்து உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த பகுதியில் உடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக குவிந்து கிடப்பதனால் சரியாக எத்தனை உடலங்கள் […]

இலங்கை

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் வழங்கி வைப்பு!

  • September 11, 2023
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் கிழக்கு மக்களின் குரல் அமைப்பினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. Voice of Srilanka அமைப்பினால் கிழக்கு மக்களின் குரல் ஊடாக 100 கண் சத்திரசிகிச்சை வில்லைகள் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டது. சுகாதார நெருக்கடி காரணமாக சத்திர சிகிச்சைகள் பிற்போடப்பட்டு இருக்கும் அபாயம் காணப்பட்டுக் கொண்டிருந்தது. அதுபோன்று பல்வேறு தரப்பட்ட சிகிச்சைகளின் எண்ணிக்கைகள் குறைந்திருந்தது. இந்நிலையில் மக்களின் நலனுக்காக இந்த வில்லைகள் இத்தாலி நாட்டில் வசித்து வரும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்த அறிவிப்பு!

  • September 11, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் புதிய கோவிட் மாறுபாடு BA.2.86 வேகமாக  பரவுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தடுப்பூசி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் வைரஸ் தொற்று வேகமாக பரவும் என்பதால் உடனடியாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், இந்த வாரம் முதல் கொவிட் மற்றும் ஃப்ளு தடுப்பூசிகளை பெறுவார்கள் தேசிய சுகாதார சேவை கூறியது. “தற்போது புழக்கத்தில் உள்ள மற்ற கோவிட்-19 வகைகளுடன் ஒப்பிடும்போது, BA.2.86 வைரஸ் மரபணுவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் […]

இலங்கை

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேகநபர்களின் நிதி தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் வெளியிட்ட தகவல்!

  • September 11, 2023
  • 0 Comments

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபர்களின் பெருமளவான நிதிகள் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் பல்வேறு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக சிவில் சமூக செயற்பாட்டாளரான வி.லவக்குமார் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் சிறைச்சாலையில் அதிசொகுசா வாழ்ந்ததாகவும் அங்கு குண்டுவெடிப்புக்கான திட்டம் தீட்டப்பட்டதாக அவரது முன்னாள் செயலாளர் தெரிவித்த விடயங்களை மறுக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். தனது சகோதரனை பிள்ளையான் குழுவே கடத்திச்சென்று காணாமல்ஆக்கியதுடன் தனக்கும் பல்வேறு […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித எலும்புக்கூடுகளை இனங்காணுவதில் சிக்கல்!

  • September 11, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இருந்து மனித எலும்புக்கூடுகளை இனங்காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எலும்புக்கூடுகள் ஒன்றின் மீது ஒன்றாக குவிந்து காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படுகிறது என்பதை இனங்காணமுடியவில்லை என அகழ்வாராய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொக்குத் தொடுவாய் பகுதியில் இன்று (11.09) ஐந்தாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  இன்றைய அகழ்வுப் […]

உலகம்

நைஜீரியா நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி! தொடரும் தேடுதல் பணி

  • September 11, 2023
  • 0 Comments

செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் வட மத்திய மாநிலமான நைஜரில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் குறைந்தது 44 பேர் காணாமல் போயுள்ளதாக நைஜீரியாவில் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 07:30 மணிக்குப் பிறகு நைஜரின் மொக்வா உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள ஒரு நீர்த்தேக்கத்தை 100 க்கும் மேற்பட்டவர்களுடன் கடக்கும்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆற்றின் நடுவில் சென்ற போது திடீரென அந்த படகு கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் […]

error: Content is protected !!