இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி: மேலும் 5 மனித எச்சங்கள் மீட்பு

  • September 14, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14) இன்று இடம்பெற்ற நிலையில், ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கி சன்னம் ஒன்றும், அத்தோடு அவர்களுடைய நீளகாற்சட்டையில் இ-1124 இலக்கமும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டன. இந்நிலையில் எட்டு நாட்கள் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. […]

செய்தி வட அமெரிக்கா

5 துருக்கிய நிறுவனங்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்த அமெரிக்கா

  • September 14, 2023
  • 0 Comments

உக்ரைன் மீதான அதன் போரில் ரஷ்யப் பொருளாதாரத்தைத் தடை செய்யும் நோக்கில் புதிய பொருளாதாரத் தடைகளை அகற்றுவதன் ஒரு பகுதியாக அமெரிக்கா ஐந்து துருக்கிய நிறுவனங்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்தது. UAV தயாரிப்பாளர்கள் உட்பட ரஷ்ய பாதுகாப்பு தொடர்பான உற்பத்தியாளர்களுக்கு பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதற்காக மூன்று துருக்கிய நிறுவனங்கள் தடைகளுக்கு உட்பட்டன. மற்றொரு இரண்டு துருக்கிய நிறுவனங்களும், அவற்றில் ஒன்றின் உரிமையாளரும், ரஷ்ய பாதுகாப்புத் துறையால் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது சம்பந்தப்பட்ட கப்பல்களுக்கு பழுதுபார்க்கும் சேவைகளை வழங்கியதற்காக […]

இலங்கை

சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையின் பாகத்தை கொழும்புக்கு அனுப்ப உத்தரவு!

  • September 14, 2023
  • 0 Comments

சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கையில் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாததால் , சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் , மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய , பொலிஸார் யாழ்.நீதவான் […]

ஐரோப்பா செய்தி

சட்டவிரோத நடவடிக்கை காரணமாக 2 அமெரிக்க தூதர்களை வெளியேற்றிய ரஷ்யா

  • September 14, 2023
  • 0 Comments

உளவு பார்த்ததாக மாஸ்கோவால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமெரிக்க தூதரக ஊழியர் ராபர்ட் ஷோனோவுடன் “தொடர்பு” செய்ததாகக் கூறி இரண்டு அமெரிக்க தூதரக ஊழியர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. விளாடிவோஸ்டோக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய ராபர்ட் ஷோனோவ், உக்ரைனில் நடந்த மோதல்கள் குறித்த தகவல்களை அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது, இரண்டு அமெரிக்க இராஜதந்திரிகள்,ஜெஃப் சில்லின் மற்றும் டேவிட் பெர்ன்ஸ்டீன் “ரஷ்ய குடிமகன் (ராபர்ட்) ஷோனோவ் உடன் தொடர்பு கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளை […]

இலங்கை

யாழ் வைத்தியர்கள் மனநோயாளிகள்? மன்னிப்பு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்-

  • September 14, 2023
  • 0 Comments

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை 14.09.23 இன்று நடத்தி கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது பாராளுமன்றில் தான் ஆற்றிய உரையின் கருத்தினால் வைத்தியர்கள் பாதித்திருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக ஜக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் நான் உரையாற்றி இருந்தேன் அதனை ஊடகம் ஒன்று திரிவுபடுத்தி அதன் […]

இலங்கை

நல்லூர் கந்தனின் வருடாந்திர மகோற்சவம் : நாளை முருகப்பெருமான் திருக்கல்யாணம்

  • September 14, 2023
  • 0 Comments

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார் , மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் காலை 07 மணிக்கு ஆலய தீர்த்த கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்த உற்சவம் இடம்பெற்றது. தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். […]

இலங்கை

யாழில் மதுபான சாலையை அகற்றுமாறு கோரி மக்கள் போராட்டம்

  • September 14, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மதுபான சாலை அமைந்துள்ள குறித்த பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் இந்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு சில தினங்களுக்குள் மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். போராட்டம் […]

ஆசியா செய்தி

ஈராகில் 2014 ஆண்டு யாத்திரை குண்டுவெடிப்பு – பயங்கரவாதிக்கு மரண தண்டனை

  • September 14, 2023
  • 0 Comments

17 யாத்ரீகர்களைக் கொன்ற 2014 தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதற்காக இஸ்லாமிய அரசு குழுவின் உறுப்பினருக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது என்று நீதித்துறை தெரிவித்துள்ளது. பாக்தாத்தின் வடக்கே தாஜி மாவட்டத்தில் நடந்த தாக்குதல், ஷியா முஸ்லிம்களின் பண்டிகைகளின் போது யாத்ரீகர்களுக்கு இலவச உணவு மற்றும் பானங்கள் வழங்கும் பல கடைகளில் ஒன்றான “மவ்காப்” கடையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கின் ஷியைட் பெரும்பான்மையினரால் மதிக்கப்படும் 12 இமாம்களில் ஒருவரான ஹசன் அல்-அஸ்காரியின் மரணத்தின் ஆண்டு […]

விளையாட்டு

இலங்கை அணிக்கு 252 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

  • September 14, 2023
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது. இன்றைய நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் வெற்றி பெற்றார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. மழைக்காரணமாக 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Mohammad Rizwan ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக […]

இலங்கை

காளை மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

  • September 14, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார். இருபாலையைச் சேர்ந்த நித்தியசிங்கம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காளை மாட்டுக்கு உணவு வைக்க சென்ற வேளை காளை மாடு முட்டி காயமுற்றவர் வீழ்ந்து கிடந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!