அரசியல் இலங்கை செய்தி

மீண்டெழ தயாராகிறது இலங்கை! சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டுக்கு நாள் நிர்ணயம்!

  • December 16, 2025
  • 0 Comments

சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு உறுதிப்படுத்தினார். டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் நோக்கிலேயே சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாடு நடத்தப்படுகின்றது. “ பேரிடரால் ஏற்பட்ட இழப்பு தொடர்பில் உலக வங்கியின் ஆரம்பக்கட்ட மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்னரே, துல்லியமான தரவுகளை நோக்கி நகர […]

ஐரோப்பா செய்தி

நிக்கோலஸ் மதுரோவை (Nicolas Maduro) பெலாரஸிற்கு வருமாறு அழைப்பு!

  • December 16, 2025
  • 0 Comments

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை (Nicolas Maduro) தனது நாட்டிற்கு  வருமாறு பெலாரஸ் (Belarus) ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பரான லுகாஷென்கோ (Alexander Lukashenko), பெலாரஸுக்கும் வெனிசுலாவுக்கும் நீண்டகால உறவுகள் இருப்பதாகவும், மதுரோ விரும்பினால் மின்ஸ்க்கு (Minsk) வரலாம் என்றும் கூறினார். அதற்கான எந்த விவாதங்களும் நடத்தப்படவில்லை என்றும், ஆனால் ட்ரம்புடன் பேசுவதற்கு திறந்த நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், மதுரோவிற்கும் இடையே மோதல் […]

இலங்கை

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு, திருமண பதிவு சான்றிதழ்கள் அழிவு

  • December 16, 2025
  • 0 Comments

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிவடைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜனவரி இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார். அண்மைய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சுமார் 2.2 மில்லியன் மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இந்த […]

இலங்கை

தமிழகம் செல்லும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – முக்கிய சந்திப்புகளுக்கு ஏற்பாடு

  • December 16, 2025
  • 0 Comments

இலங்கை மீது சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்த இவ்வாரம் சென்னைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு “ஏக்கிய இராச்சிய“ அரசியல் அரசியலமைப்பை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான […]

ஐரோப்பா செய்தி

தொழிநுட்ப கோளாறு – பிரித்தானியாவில் வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் விதிப்பு

  • December 16, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் ஓட்டுநர்கள் சிலருக்கு வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் தெரிவித்துள்ளன. சில வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கெமராக்களின் தொழிநுட்ப கோளாறே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட A வீதிகள் மற்றும் மோட்டார் பாதைகளில் உள்ள, நிலைக்கு ஏற்ப வேகம் மாறும் முறைமையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், வேக வரம்பு மாற்றப்பட்டதும் சில ஓட்டுநர்கள் தவறாக வேகமாக ஓட்டியதாகக் கணக்கிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீரமைப்பு பணிகள் தற்பாது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய […]

இலங்கை

டிட்வா பேரழிவு -வீதிகள் மற்றும் பாலங்களை மீட்டெடுக்க 190 பில்லியன் ரூபா தேவை

  • December 16, 2025
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் கூடியது. இதன்போது நாட்டில் ஏற்பட்ட பேரழிவின் தன்மை மற்றும் அதனால் ஏற்பட்ட சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களை மதிப்பிடுவதற்கு […]

இலங்கை செய்தி

வெருகல் பிரதேச செயலாளருக்கு ஆதரவாக வெருகலில் ஆர்ப்பாட்டம்!!

  • December 16, 2025
  • 0 Comments

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளருக்கு ஆதரவாக மக்கள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெருகல்,மாவடிச்சேனை, சேனையூர்,வட்டவான் போன்ற கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிற்கதியாக இருந்த நிலையில் பிரதேச செயலாளர் வீடு வீடாக வந்து எங்களை ஏற்றிக் கொண்டு சென்று முகாமில் தங்க வைத்தனர். முகாமில் இருந்த பத்து நாட்களும் அவர் எங்களுடன் நாங்கள் சாப்பிட்ட உணவையே சாப்பிட்டு எங்களுடைய முகாமை பார்வையிட்டு வந்தார். இவ்வாறான ஒரு தொண்டு சேவையில் ஈடுபட்ட பிரதேச செயலாளர் மீண்டும் எங்களை வீட்டில் […]

உலகம் செய்தி

சிட்னியில் ஒரு குடும்பத்தை கொலை செய்த தென்கொரிய நபருக்கு ஆயுள் தண்டனை!

  • December 16, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 7 வயது மாணவனையும் அவரின் பெற்றோரையும் கொலை செய்த டேக்வாண்டோ (taekwondo) பயிற்றுவிப்பாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றத்தில்  இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி மேற்படி தீர்ப்பளித்தார். 51 வயதான குவாங் கியுங் யூ (Kwang Kyung Yoo) என அடையாளப்படுத்தப்படும் கொலை குற்றவாளி ஒருபோதும் பிணையில் விடுதலையாக தகுதிப் பெறமாட்டார் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார். குறித்த நபர் குடும்பத்தின் […]

உலகம்

ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) ஏற்கனவே இறந்திருக்கலாம் – கவலையில் மகன்!

  • December 16, 2025
  • 0 Comments

ஆங் சான் சூ கியின் (Aung San Suu Kyi) மகன் கிம் அரிஸ் (Kim Aris), இரண்டு வருட தகவல் முடக்கம் மற்றும் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தனது 80 வயது தாயார் “ஏற்கனவே இறந்திருக்கலாம்” என்று அச்சம் தெரிவித்துள்ளார். நோபல் அமைதிப் பரிசு பெற்ற திருமதி சூ கி, 2021 ஆம் ஆண்டு மியான்மரில் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக […]

error: Content is protected !!