உலகம்

அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

  • December 14, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படாததால், அப்பகுதியில் உள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து பல்கலைக்கழகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. மேலும் பொதுமக்கள் […]

உலகம் செய்தி

சிரியாவில் IS தீவிரவாத தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் மரணம்

  • December 13, 2025
  • 0 Comments

சிரியாவில்(Syria) இஸ்லாமிய அரசு(IS) குழு உறுப்பினர் ஒருவர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும், ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும்(interpreter) கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. சிரியாவின் பால்மைராவில்(Palmyra) நடந்த இந்த தாக்குதலில் மேலும் மூன்று சேவை உறுப்பினர்கள் காயமடைந்ததாகவும் துப்பாக்கிதாரி உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் வரை 24 மணி நேரம் மறைக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு இதுவரை […]

உலகம் செய்தி

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் மூத்த தளபதி மரணம்

  • December 13, 2025
  • 0 Comments

காசாவில்(Gaza) நடந்த வாகனத் தாக்குதலில் ஹமாஸின்(Hamas) மூத்த தளபதி ஒருவரைக் கொன்றதாக இஸ்ரேல்(Israel) தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவமும் ஷின் பெட்(Shin Bet) பாதுகாப்பு நிறுவனமும் ஒரு கூட்டு அறிக்கையில், காசா நகரில் ஹமாஸின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம்(Qassam ) படைப்பிரிவுகளின் ஆயுத உற்பத்தித் தலைவரான ரயீத் சாத்(Raed Saad) கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது அக்டோபர் 7ம் திங்க்தி காசா நகரத்திற்கு கிழக்கே இஸ்ரேலிய சமூகங்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது ரயீத் சாத் மிக முக்கியமான கஸ்ஸாம் தளபதிகளில் […]

இலங்கை செய்தி

பௌத்த பிக்குகளுக்கு நேரம் இல்லையாம்!!

  • December 13, 2025
  • 0 Comments

திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அரச மரத்தின் கிளை உடைந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தேசிய உணவு விற்பனை நிலையத்துக்கு முன்னால் விழுந்து காணப்படுகின்றது. தற்போது அசாதாரண சூழ்நிலை காரணமாக பௌத்த பிக்குகளுக்கு நேரமில்லாமையினால் குறித்த மரக்கிளை அகற்றப்படாமல் காணப்படுகின்றது. வைத்தியசாலைக்கு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லொறியின் மேல் பகுதி பட்டமையால் அரச மரத்தின் கிளை உடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. திருகோணமலையில் பௌத்த பிக்குகளின் கொடுப்படியினால் கிளையை அகற்ற முடியாத நிலைக்கு வைத்தியசாலை நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு […]

உலகம் செய்தி

இம்ரான் கானின் தடுப்புக்காவல் குறித்து பாகிஸ்தானை எச்சரித்த ஐ.நா நிபுணர்

  • December 13, 2025
  • 0 Comments

அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் இம்ரான் கானின் தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்து ஐ.நா. நிபுணர் ஒருவர் பாகிஸ்தானை(Pakistan) எச்சரித்துள்ளார். முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்(Imran Khan) தடுப்புக்காவல் நிலைமைகளை அவசரமாக மேம்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர் ஒருவர் பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளார். சிறையில் அவர் சித்திரவதை அல்லது பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான தண்டனைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ்(Alice Jill Edwards) கவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆலிஸ் ஜில் […]

இந்தியா செய்தி

உத்தரப் பிரதேசத்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி

  • December 13, 2025
  • 0 Comments

சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிட்(acid) வீச்சு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ஒருவர் மத்தியப் பிரதேசத்தில் துறவியாக வாழ்ந்து வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் என்ற ஆயுள் தண்டனை கைதி சிவபுரி மாவட்டத்தில் உள்ள காயத்ரி சக்தி(Gayatri Shakti) பீடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 1986ம் ஆண்டு, அப்போது புகார்தாரர்களான கங்காதீன்(Gangadeen) மற்றும் ஓம் பிரகாஷ் ரஸ்தோகி(Om Prakash Rastogi) ஆகியோர் உத்தரப் பிரதேசத்தின்(Uttar Pradesh) ஷாஜகான்பூர்(Shahjahanpur) மாவட்டத்தில் தங்கள் நகைக் கடைக்கு நகைகளை சுத்தம் […]

உலகம் செய்தி

கனடாவில் லாரி ஓட்டுநர்கள் இடையே துப்பாக்கிச் சூடு – 3 இந்திய வம்சாவளியினர் கைது

  • December 13, 2025
  • 0 Comments

கனடாவின்(Canada) பிராம்ப்டனில்(Brampton) இரண்டு லாரி ஓட்டுநர்கள் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக மூன்று இந்திய வம்சாவளி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்காவது சந்தேக நபரைத் தேடும் பணி இன்னும் நடைபெற்று வருவதாக பீல் பிராந்திய காவல்துறையினர்(Peel Regional Police) தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்ஜோத் பட்டி(Manjot Bhatti), நவ்ஜோத் பட்டி(Navjot Bhatti) மற்றும் அமன்ஜோத் பட்டி(Amanjot Bhatti) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மெக்வீன் டிரைவ்(​​McQueen Drive) மற்றும் காசில்மோர்(Castlemore) சாலை பகுதியில் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து: பிரசவ இரத்தப்போக்கு (PPH) அபாயம் 5 ஆண்டுகளில் 19% உயர்வு.

  • December 13, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் பிரசவத்துக்குப் பிந்தைய இரத்தப்போக்கு அபாயம் 5 ஆண்டுகளில் உச்சம்; 19% அதிகரிப்பு. இங்கிலாந்தில் தாய்மார்கள் பிரசவத்துக்குப் பின்னர் கடுமையான இரத்தப்போக்கை (Postpartum haemorrhage) அனுபவிக்கும் விகிதம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 19% அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் ஆயிரம் பிறப்புகளுக்கு 27 ஆக இருந்த இந்த விகிதம், தற்போது ஆயிரத்துக்கு 32 ஆக உயர்ந்துள்ளது. பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்த போதிலும், இந்தக் கடுமையான இரத்தப்போக்கு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மகப்பேறு பராமரிப்புத் துறை வெளியிட்ட தரவின்படி […]

உலகம் செய்தி

ஈரானில் நான்கு வயது வளர்ப்பு மகளைக் கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • December 13, 2025
  • 0 Comments

வடமேற்கு ஈரானில்(Iran) நான்கு வயது வளர்ப்பு மகளைக் கொன்றதற்காக ஒரு பெண்ணை தூக்கிலிட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. அவா(Ava) என அடையாளம் காணப்பட்ட குழந்தை, தனது மாற்றாந்தாய் ஏற்படுத்திய காயங்களால் டிசம்பர் 2023ல் இறந்ததாக நீதித்துறையின் மிசான்(Mizan) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்கு மார்ச் 2024 தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு அஜர்பைஜான்(Azerbaijan) மாகாணத்தின் தலைமை நீதிபதி நாசர் அதாபதி(Naser Atapati), விடியற்காலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், குழந்தையின் பாதுகாப்பு கரங்களுக்காக […]

இந்தியா செய்தி

அருணாச்சலப் பிரதேச விபத்து – 7 தொழிலாளர்களின் உடல்கள் 4 நாட்களுக்குப் பிறகு மீட்பு

  • December 13, 2025
  • 0 Comments

அருணாச்சலப் பிரதேசத்தில்(Arunachal Pradesh) திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில் இறந்த ஏழு தொழிலாளர்களின் உடல்கள், சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமின்(Assam) தின்சுகியா(Tinsukia) மாவட்டத்தைச் சேர்ந்த 22 தினக்கூலி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. மீட்பு நடவடிக்கையின் போது, ​​தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொழில்நுட்ப கயிறு மீட்பு முறைகளைப் பயன்படுத்தி உடல்களை மீட்டதாக அஞ்சாவ் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நாங் சிங்னி […]

error: Content is protected !!