உலகம் செய்தி

01 இலட்சம் கலைப்படைப்புக்கள் – எகிப்தில் திறக்கப்படும் பிரமாண்ட அருங்காட்சியகம்!

  • November 1, 2025
  • 0 Comments

பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான கிசாவில் உள்ள குஃபுவின்  (Khufu at Giza)  பெரிய பிரமிடு அருகே மிகப் பெரிய அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்படவுள்ளது. உலகின் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியகம் என்று விவரிக்கப்படும் கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் (GEM), ஏழு ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கிய சுமார் 100,000 கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்படவுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த அருங்காட்சியகத்தில்  எகிப்திய இராச்சியத்தின் பதினெட்டாவது வம்சத்தின் 13-வது மன்னனான துட்டன்காமூனின்  (Tutankhamun) சிலை காட்சிப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் அவர் […]

இலங்கை

மாகாணசபைத் தேர்தல் – முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே திகதி அறிவிப்பு

  • November 1, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும் என்று பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். “மாகாணசபை தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதற்காக பழைய முறைமை கடந்த காலத்தில் இரத்து செய்யப்பட்டது. எனினும், இதற்குரிய நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை. சட்டமூலத்தை கொண்டுவந்த அமைச்சர்கூட […]

இலங்கை

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம்

  • November 1, 2025
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சி தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், மாகாணசபைத் தேர்தல், அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்;வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன. அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் இடையில் […]

உலகம்

அமெரிக்காவில் தொடரும் ட்ரம்பின் அதிரடிகள் – கடுமையாகும் அகதிகள் கட்டுப்பாடுகள்

  • November 1, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் நாட்டுக்குள் நுழையும் அகதிகள் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. அத்துடன் இனரீதியாக முன்னுரிமை அளிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதற்கமைய அதிகபட்சமாக 7,500 அகதிகள் மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் 125,000 அகதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த வரம்பை 7,500 ஆக ட்ரம்ப் நிர்வாகம் அதிரடியாகக் குறைத்துள்ளது. தேசியப் பாதுகாப்பு மற்றும் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு […]

உலகம்

சிங்கப்பூரில் தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி! வர்த்தகச் சந்தையில் அதிகரிக்கும் கிராக்கி

  • November 1, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் வெள்ளியில் முதலீடுகளை மேற்கொள்ள அதிகளவான வர்த்தகர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவந்துள்ளது. உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. தங்கத்தை விட வெள்ளியின் விலை மிகவும் குறைவாக உள்ளதாகவும், அதற்கான கிராக்கி அதிகரிக்கும் எனவும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். வெள்ளியிலான வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் கொள்வனவு செய்வதில் ஒரு தரப்பினர் விருப்பம் கொண்டுள்ளனர். அதேவேளை, தங்கத்தில் முதலீடு செய்வதே வழக்கம் என்றும், வெள்ளிப் பொருட்களை வாங்குவதில்லை என்றும் […]

இலங்கை

இந்தியப் பெருங்கடலில் நில அதிர்வு – இலங்கை நிலை என்ன?

  • November 1, 2025
  • 0 Comments

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. 6.0 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குத் தொலைவில் ஏற்பட்டுள்ளதால், எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், உயிர்ச் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நில அதிர்வினால் இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வியல்

உடல் எடையின் ஆபத்து குறித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • November 1, 2025
  • 0 Comments

மனிதர்கள் உடல் எடையைக் குறைப்பது தொடர்பில் பின்பற்றும் நடைமுறைகளின் ஆபத்து குறித்து புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உடல் நிறை குறியீட்டை (BMI) மட்டுமே ஆரோக்கியத்தின் முக்கிய அளவீடாகப் பயன்படுத்துவது முறையானது இல்லை என இந்த ஆய்வின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 91 நாடுகளில் 471,000 பெரியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், எடை மற்றும் உயரத்தை மட்டுமே கருத்தில் கொள்வதால், ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் உள்ளுறுப்புக் கொழுப்பை (Visceral Fat) அடையாளம் […]

ஐரோப்பா

வலுவடைந்துவரும் யூரோவின் மதிப்பு – வட்டி விகிதங்களைக் குறைக்க இத்தாலி கோரிக்கை

  • November 1, 2025
  • 0 Comments

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி வலியுறுத்தியுள்ளார். யூரோவின் வலுவான மதிப்பு தங்கள் நாட்டின் ஏற்றுமதியாளர்களைப் பாதித்து வருவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார். “அமெரிக்கா விதித்த கட்டணங்களுக்கு மேலதிகமாக, பலவீனமடைந்து வரும் டாலரும், வலுவான யூரோவும் நமது ஏற்றுமதியாளர்களைச் சிரமத்தில் ஆழ்த்துகின்றன. அமெரிக்க மத்திய வங்கி போல, ஐரோப்பிய மத்திய […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தீவிரம்

  • November 1, 2025
  • 0 Comments

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஆட்களை ஏமாற்றிய சம்பவம் பற்றி கூடுதலான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இலங்கையில் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டும், போலிப் பிரச்சார நடவடிக்கைகள் ஊடாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. பல பிரச்சார விளம்பரங்கள் போலியானவை. இவற்றை வெளியிடுவதற்கு முன்னதாகப் பணியகத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தாலும், பெரும்பாலான விளம்பரங்களுக்கு அத்தகைய அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனுமதியின்றி சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் […]

உலகம்

பிரேசிலில் விளையாட மறுத்த தாயை கொடூரமாக கொலை செய்த 9 வயது மகன்

  • November 1, 2025
  • 0 Comments

பிரேசிலில் தாயைக் கொலை செய்த ஒன்பது வயது சிறுவன் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வெளியில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்த 37 வயதான தாயை சிறுவன் பல முறை கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளியில் சென்று விளையாடுவது தொடர்பாகத் தாய்க்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது. பலத்த காயங்களுக்கு உள்ளான அந்தப் பெண், அயலவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மகனின் கத்திக் குத்துக்கு இலக்கான தாய், […]

error: Content is protected !!