உலகம்

கனடாவை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் இதோ…!

கனடாவில் பாடசாலையொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்றழைக்கப்படும் 18 வயதான இவர் திருநங்கையென தெரியவந்துள்ளது.

கனடாவின பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் நேந்று நடந்த ப்பாக்கிச் சூட்டில் ஐந்து மாணவர்கள், ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெஸ்ஸி, முதலில் தனது வீட்டில் 39 வயது தாய் மற்றும் 11 வயது தம்பியைச் சுட்டுக் கொன்றுள்ளார்.

அதன் பின்னரே தான் முன்பு பயின்ற பாடசாலைக்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு ஜெஸ்ஸி பாடசாலை நூலகத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவரையும் சேர்த்து இந்த சமபவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆணாகப் பிறந்த ஜெஸ்ஸி, தன்னை திருநங்கையாக அடையாளபப்படுத்தி கொண்டார்.

சமூக அழுத்தம் காரணமாக அவருக்குக் மனநல பிரச்சனைகள் இருந்ததாகவும், முன்னதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்று வெவ்வேறு காரணங்களுக்காக விசாரணை நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

அதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அரசு அலுவலகங்களில் ஏழு நாட்களுக்குத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கனடா பிரதமர் அறிவித்தார்.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!