ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்

ஜெர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியிலிருந்து வெளிநாடுகளுக்கு புகலிட கோரிக்கையாளர்கள் பணம் அனுப்புவதை தடை செய்யும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஜெர்மனிக்குள் பிரவேசிக்கும் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த புகலிட கோரிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் உதவித் தொகையை சொந்த நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.

இதனை தடுப்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட வகையில் பண அட்டைகள் ஊடாக உதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனி நாட்டினுள் வரும் அகதிகளுக்கு பெசால்ட் காட் என்று சொல்லப்படுகின்ற பண அட்டையின் மூலமாக குறிப்பிடத்தக்க பணத்தை மட்டும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பயண் மாநிலமானது ஏற்கனவே பண அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், மேலும் ஒரு அகதியானவர் 50 யுரோக்களை மட்டும் காசாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும்,

மற்றைய தொகைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிலன்டன் பேர்க் மாநிலமானது சில நகரங்களில் பண அட்டையை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றது. இவர்களின் இந்த முடிவானது வெகு விரைவில் நடைமுறைப்புடுத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பசுமை கட்சியானது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மேலும் cdu மற்றும் STU கட்சி இரண்டும் ஒன்றாக 50 யுரோக்களை மட்டுமே வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஜெர்மனி நாட்டில் பல மாநிலங்களிலும் இநத நடைமுறையை அமுல்படுத்துவதற்கு ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரியவந்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!