ஐரோப்பா

உக்ரைன் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – 16 மாதங்களின் பின் கிடைத்த அனுமதி

உக்ரைன் நாட்டின் மிகப்பெரியத் துறைமுக நகரான ஒடெசாவில், கடற்கரைக்குச் செல்ல மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

16 மாதங்களுக்குப் பிறகு மக்கள் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் கடற்படைத் தளம் ஒடெசாவில் அமைந்துள்ளதால், போர் ஆரம்பித்தது முதலே அந்நகரை குறிவைத்து ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

தற்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கடற்கரைக்குச் செல்லவும், குளிக்கவும் அம்மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த கடற்பரப்பில் நூற்றுக் கணக்கான கண்ணி வெடிகளை ரஷ்யப் படைகள் மிதக்க விட்டுள்ளதால், அவை கரை ஒதுங்கிவிடாத வகையில், பாதுகாப்பு வலைகள் அமைக்கப் பட்டுள்ளன.

 

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்