வட அமெரிக்கா

கடவுள் என் பக்கம்தான் – பிரச்சார மேடையில் கூறிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

கடவுள் என் பக்கம்தான் இருக்கிறார் என்று, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.

துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குப் பிறகு பங்கேற்ற பிரசாரத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் மீது கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில், நூலிழையில் அவர் உயிர்தப்பினார். தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், அவர் குணமடைந்து, மீண்டும் தேர்தல் பிரசாத்தில் பங்கேற்றுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்சினில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் டிரம்ப் பேசுகையில்,
“இன்றிரவு, நம்பிக்கையுடனும் பக்தியுடனும், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக நீங்கள் என்னை நியமித்ததை நான் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவியேற்க வேண்டும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஒவ்வொரு இனம், மதம், நிறம் மற்றும் குடிமக்களுக்கான பாதுகாப்பு, செழிப்பு மற்றும் சுதந்திரத்தின் புதிய சகாப்தத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்குவோம்” என்றார்.

நம் சமூகத்தில் உள்ள முரண்பாடு மற்றும் பிளவு குணமாக வேண்டும், அதை விரைவில் சரிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

(Visited 32 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்